தமிழ்நாடு முழுவதும் இன்று கொரோனா அலர்ட்… மா.சுப்பிரமணியன் போட்ட புதிய உத்தரவு..!

மிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனால் மருத்துவமனைகள் மற்றும் பொது இடங்களில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் தமிழக முழுவதும் ஏப்ரல் 10 மற்றும் 11 அதாவது இன்றும் நாளையும் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பு சிகிச்சை ஒத்திகை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இன்று முதல் rtpcr பரிசோதனையை நாள்தோறும் 11 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உயர்த்தப்படுகிறது. தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து முக கவசம் அணிய வேண்டும். தொற்று அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.