திருமண ஆகாத விரக்தியில் கோவை வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை..

கோவை கிணத்துக்கடவு பக்கமுள்ள தேவரட்டி பாளையத்தை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் விஜயகுமார் (வயது 36) கூலி தொழிலாளி.இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக பெண் பார்க்கும் படலம் நடந்து வந்தது ”ஜாதக பொருத்தம் சரி இல்லாததால் திருமணம் தள்ளிக் கொண்டே போனது.இதனால் வாழ்க்கையில் வெறுப் படைந்த விஜயகுமார் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இவரது தந்தை ஆறுச்சாமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..