கோவை டாஸ்மாக் பாரில் பதுக்கி வைத்து மது விற்பனை: 5 ஊழியர் கைது – 155 பாட்டில் பறிமுதல்..!

கோவை சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடை, பாரில் கடை திறப்பதற்கு முன் காலையிலே மது விற்பதாக மதுவிலக்கு அமுல் பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சேகர் அங்கு நேற்று காலையில் திடீர் சோதனை நடத்தினார். அப்போது மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள், மரிய பிலிப் (வயது41) புதுக்கோட்டை பாலையா (வயது 30) ஜீவா ( வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 78 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல சிங்காநல்லூர் பஸ் நிலையம் அருகே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடைபாரில் நடந்த சோதனையில் மதுப்பாட்டில் களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக பார் ஊழியர்கள் புதுக்கோட்டை சத்தியமூர்த்தி (வயது 38) ராமு (வயது 32 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.77 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.