கோவை தண்டு மாரியம்மன் கோவில் தீச்சட்டி ஊர்வலம் – நாளை போக்குவரத்தில் மாற்றம்.!!

கோவை உப்பிலிபாளையம் அவிநாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ( புதன்கிழமை) பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. எனவே கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோனியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி, பால் மார்க்கெட் சிரியன் சர்ச் ரோடு, புரூக் பாண்ட் ரோடு, காளீஸ்வரர் மில், நஞ்சப்பர ரோடு வழியாக அவினாசி ரோடு மேம்பாலத்தை ஒட்டி வலதுபுறம் திரும்பி அவிநாசி ரோடு மேம்பாலத்தில் அடியில் சென்று இடதுபுறம் திரும்பி தண்டபாணி அம்மன் கோவில் சென்று அடைகிறது. எனவே தீச்சட்டி ஊர்வலத்தை முன்னிட்டு கோவையில் நாளை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது..