கோவை வழக்கறிஞர் தற்கொலை வழக்கில் மனைவி கைது..!

கோவை ராமநாதபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் அக்ஷய் ( வயது 27)வக்கீல் .இவர் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அனுதர்ஷினி என்பவரை திருமணம் செய்து கொண்டார் .பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த வக்கீல் அக்ஷய் கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்சயின் பெற்றோர் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தனர் .அதில் மகனின் சாவுக்கு மருமகள் அனுதர்ஷினி தான் காரணம் என்று கூறியிருந்தனர் .இதில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து கணவனை தற்கொலைக்கு தூண்டியதாக மனைவி அனுதர்ஷினியை போலீசார் நேற்று கைது செய்தனர்.