கோவை பட்டதாரி பெண்ணிடம் ரூ 47 லட்சம் மோசடி- தம்பதி மீது வழக்கு..!

கோவைபுதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் கோபிநாத் மனைவி ரேணுகா ( வயது 39) முதுநிலை பட்டதாரி. இவரிடம் கணபதியை சேர்ந்த ராஜ்குமார் சாமுவேல் அவரது மனைவி கவிதா ஆகியோர் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டனர். பின்னர் தாங்கள் பெரிய நிறுவனம் நடத்தி வருவதாகவும், ஏராளமானவர்களிடம் தொடர்பு இருப்பதால் முதலீடு செய்வதால் அதிக பங்கு தருவதாகவும் தெரிவித்தனர். இதனை நம்பி ரேணுகா ரூ 48 லட்சத்தை இந்த தம்பதியிடம் கொடுத்துள்ளார் .ஆனால் பங்குத்தொகை எதுவும் கொடுக்கவில்லை. செலுத்திய தொகையும் திருப்பி கொடுக்கவில்லை தொடர்ந்து வற்புறுத்தியதை தொடர்ந்து ரூ 1லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதித் தொகையான ரூ. 47 லட்சத்தை மோசடி செய்து விட்டனர் . இதுகுறித்து ரேணுகா குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் ராஜ்குமார் சாமுவேல் அவரது மனைவி கவிதா ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து போலீசார் அவர்களை தேடி வருகிறார்கள்..