கோவை பட்டதாரி பெண் மாயம் – காதலனுடன் ஓட்டமா..?

கோவை கணபதி வேதாம்பாள் நகரை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மகள் தீபா (வயது 22 )பிகாம் சி.ஏ. பட்டதாரி.இவர் கடந்த 15 ஆம் தேதி வீட்டில் எல்லோரும் தூங்கி கொண்டிருந்த போது எழுந்து எங்கோ சென்று விட்டார்.இதுகுறித்து அவரது தாயார் கனக புஷ்பம் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார்..இவர் ரத்தினபுரியை சேர்ந்த ஒருவருடன் காதல் வைத்து இருந்தாராம்.அவருடன் எங்காவது மாயமாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது.செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.