கோவையில் சேவல் சண்டை பந்தையம்..!

கோவையில் சேவல் சண்டை பந்தையம்.. சேவல் சண்டை பந்தையத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது போலிஸார் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுவிப்பு..

கோவையில் தோட்டம் பகுதி ஒன்றில் சேவல் சண்டை நடத்திப் பந்தயம் கட்டி சட்டவிரோத செயல்கள் ஈடுபட்ட ஐந்து பேர் கைதாகினார். குமார், ராஜேந்திர பிரசாத், நாகராஜ், சீனிவாசன், ஜெயராஜ் உள்ளிட்ட ஐந்து நபர்கள் சேவல் சண்டை வைத்து பந்தயம் கட்டி விளையாடி இருக்கின்றனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று ஐந்து பேரையும் கைது செய்து சேவல்களை மீட்டனர். கைதான பந்தையக்காரர்கள் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்..