சென்னை சென்ட்ரல் – கோவை: வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றி.!!

சென்னை சென்ட்ரல் – கோவை இடையேயான வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

நாட்டின் அதிவேக வந்தே பாரத் ரயில் திட்டம் பல மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகிறது.

அதன் படி சென்னை – மைசூரு இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ள வந்தே பாரத் ரயிலின் வெள்ளோட்டம் நடைபெற்றது.

அதன்படி, காலை 5.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த ரயில் கோவை வரை இயக்கப்பட்டு, தொழில்நுட்ப ரீதியான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ரயில் சேவையை ஏப்ரல் 8 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.