இன்று அக்டோபர் 26ம் தேதி தமிழகம் முழுவதும் சிலிண்டர் டெலிவரிமேன்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். கேஸ் ஏஜென்ஸிகளின் கீழ் சிலிண்டர் டெலிவரி செய்யும் டெலிவரிமென், மெக்கானிக், டிரைவர்கள், குடோன் கீப்பர், லோடுமேன்கள், பணியாளர்கள் என பலரும் வருகின்றனர். இவர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை பல்வேறு தருணங்களில் முன்வைத்து வந்த நிலையில், ...
புதுடெல்லி: ரத்தன் டாடா எழுதி வைத்த உயில் விவரங்கள் வெளியான நிலையில், அதில் தனது சமையல்காரர், உதவியாளர், வளர்ப்பு நாய்க்கும் அவர் சொத்துக்களை ஒதுக்கியுள்ளார். இந்தியாவின் பெரும் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடா கடந்த 9-ம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இந்த நிலையில், அவர் எழுதி வைத்த உயில் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. ரத்தன் டாடாவுக்கு ...
பெங்களூரில் இருந்து கோவை நோக்கி காரில் வந்துக் கொண்டிருந்த 3 கல்லூரி மாணவிகள், நேற்று நள்ளிரவு அவிநாசி அருகே வந்துக் கொண்டிருந்த போது லாரி மீது பயங்கர வேகத்தில் மோதி, கார் அப்பளமாய் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 3 கல்லூரி மாணவிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர். இதில் 2 ...
போபால்: மனித உரிமை மீறலைத் தடுக்க மாநிலம் முழுதும் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களின் அனைத்து அறைகளிலும் மூன்று மாதங்களுக்குள் சிசிடிவி கேமராக்களை நிறுவ மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் உள்ள பாலுமடா ...
பெங்களூரு: கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களது வீடுகளை தீவைத்து கொளுத்திய வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனையும், 3 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து கர்நாடக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி அடுத்த மரகும்பி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (42). இவர் அங்குள்ள திரையரங்கில் ...
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸாவின் ஹமாஸ் படைத் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார். இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் போரை விட்டுவிட்டு தங்கள் நாட்டு பிணயக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என இஸ்ரேல் கூறியிருந்தது. அதேபோல், போரை நிறுத்த ஹமாஸ் அமைப்பினரும் சில நிபந்தனைகளை விதித்திருந்தனர். இதனால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் முடிவுக்கு வரும் ...
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி தொடங்கிய நிலையில், தற்போது தீவிரமடைந்து வருகிறது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளின்மேல் ஒரு கிழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ...
கோவை பீளமேடு செங்காளியப்பன் நகரை சேர்ந்தவர் பார்வதி முத்து. இவரது மகள் பிரியதர்ஷினி ( வயது 19 ) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் டிப்ளமோ நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 20 நாட்களாக மருத்துவமனைக்கு செல்லவில்லை. இந்த நிலையில் நேற்று அங்குள்ள தனது தோழியை பார்ப்பதாக வீட்டில் கூறிவிட்டு ...
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து வருகிறது .இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7:மணி முதல் 8 மணி வரையிலும் என ...
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள ஒரு மின்மாற்றியில் பிற்பகல், மின்வாரிய ஊழியா் ஒருவா் இணைப்புகளை சரிசெய்து கொண்டிருந்தாா். அப்போது, அவரது கால் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் காலில் பலத்த தீக்காயமடைந்த அவா் கீழே இறங்க முடியாமல் மின்கம்பத்திலேயே சாய்ந்த நிலையில் தொங்கினாா். இதை கண்ட சக ஊழியா்கள் மின் இணைப்பைத் துண்டித்து, காயமடைந்த ...













