வள்ளலார் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வள்ளலார் நெற்றியில் திருநீறு இல்லாத புகைப்படத்தை பகிர்ந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “பிறப்பால் சாதி வேறுபாடு காண்பதைக் கண்டித்து, எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் என்ற ...

சென்னையில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 3-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், நட்சத்திர விடுதிகளில் ஆயுதப்படை காவலர்கள் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அடையாறு பகுதியில் ...

பா.ஜ.க மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கூட்டணியில் இருந்து செல்பவர்கள் செல்லட்டும் என்று கூறினார். மேலும், நடைபயணம் நிறைவு நாளில் பிரதமர் மோடி கலந்துகொள்வார் என்று கூறினார். தமிழக பா.ஜ.க அண்ணாமலை, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதா குறித்து பேசிய கருத்துகளால் 2019-ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ...

தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை, அண்ணா பிறந்தநாளன்று  காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார், கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதம்ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும்என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த ...

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த 4 ஆண்டுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் அண்ணாமலையின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட போவாதவும் அறிவித்துள்ளது. இந்த பரபரப்பான சூழலில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை தேசிய தலைமை டெல்லிக்கு அழைத்தது. இதன் ...

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர்கள், காவல் உயரதிகாரிகள் மாநாட்டில் 2 வது நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ”அரசு பள்ளி விடுதி மாணவர்களுக்கான உணவு உதவித் தொகை ரூ.1000 லிருந்து ரூ.1400 ஆகவும், அரசுக் கல்லூரி விடுதி மாணவர்களுக்கான ...

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தை ஊக்குவிக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்ட வனத்துறை அலுவலர்கள் மாநாடு இன்று(செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: வனப்பாதுகாப்பு மற்றும் ...

திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய ஆண்டுதோறும் ஒரு பெண், கட்டளைதாரராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடிகை குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு வருடம் அவர் இந்தப் பதவியில் தொடர்வார். இதை முன்னிட்டு சிறப்பு நாரி பூஜைக்கு கோயில் நிர்வாகம் குஷ்புவுக்கு அழைப்பு விடுத்தது. அதை ஏற்று அவர் கலந்து ...

பீகாரில் நடத்தப்பட்டது போன்று தேசிய அளவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. பீகாரில் ஆளும் ஜேடியூ- ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியது. 90 ஆண்டுகளில் நாட்டில் நடத்தப்பட்ட முதல் சாதிவாரி கணக்கெடுப்பு இதுவாகும். இதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சாதக, பாதகமான தீர்ப்புகள் வந்தன. ...

பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்தை, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று மத்திய அரசு “தூய்மை பாரதம் எனும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அனைவரும் காலை 10 மணி முதல் 11 மணி வரையில் தங்கள் ...