கரூா்: மக்களவைத் தோதலில் தமிழகத்தில் பாஜக- திமுக இடையேதான் போட்டி என்றாா் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை. கரூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரூா் மக்களவைத் தொகுதி செயல்வீரா்கள் கூட்டம், வேட்பாளா் அறிமுகக் கூட்டம் மற்றும் காரியாலயத் திறப்பு விழா செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கரூா் மக்களவைத் தொகுதியின் பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன் ...

நாடாளுமன்ற தேர்தலில் 40க்கும் 40 இடங்களை கைப்பற்ற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி எடுத்துள்ளார். இதற்காக கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு கூட்டணி கட்சியினர் வெற்றிக்கு உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆனால் திருச்சி தொகுதியில் திமுக- மதிமுக இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் திமுக ...

நீலகிரி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உதகையில் உள்ள, மாரியம்மன் கோவிலுக்கு ...

 எடப்பாடி பழனிச்சாமி துரோகத்தை தட்டி கேட்டதற்கு என்னை தண்ணீர் பாட்டிலால் அடித்தார்கள் என ஓ.பி.எஸ் பேச்சு ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக தொ.உ.மீ.கு ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி அளித்தார். அவர் கூறும் போதும், “என்னை கேள்வி கேட்பதற்கு ஆர்.பி ...

அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்… “எனக்கு ஆரம்பத்தில் தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை. கலைஞர்தான் என்னை போட்டியிடச் சொன்னார். என்னிடம் தேர்தலுக்கு பணம் இல்லை ...

தூத்துக்குடி: மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக தலைவரும்,தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வேட்பாளர் கனிமொழி கருணாநிதியை ஆதரித்து தூத்துக்குடி காமராஜர் மார்கெட் பகுதிகளில் வியாபாரிகளிடமும், பொதுமக்களிடமும் இன்று (மார்ச் 26) காலை வாக்கு சேகரித்தார். தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதா ஜீவன், ...

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தன்னை விடுவித்து சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் எந்த தவறும் இல்லை உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டது. கடந்த 2001-06 அதிமுக ஆட்சிகாலத்தில் வருவாய்த் துறை அமைச்சராக பதவி வகித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.77 கோடி அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக 2006-ம் ஆண்டு ...

தேனி: தேனி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனை வெற்றி பெறச் செய்ய முடியாவிட்டால் அடுத்த நாளே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன் என ஆவேசமாகப் பேசியுள்ளார் அமைச்சர் மூர்த்தி. தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், ...

வேட்பு மனுத் தாக்கலில் ஆட்சியர் உறுதிமொழி படிவத்தை வாசிக்கச் சொன்னபோது `தமிழ் தெரியாது’ என்று விருதுநகர் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கூறினார். இதையடுத்து ஆட்சியர் வாசிக்க, பின் தொடர்ந்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார். தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே உள்ள மேலக்கலங்கலைச் சேர்ந்தவர் சி.கவுசிக் (27). மருத்துவரான இவர், நாம் தமிழர் கட்சியின் மருத்துவர் ...

பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கிய நிலையில் மதிமுக விசிக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்காதது ஜனநாயக படுகொலை என திருச்சி மதிமுக வேட்பாளர் துரைவைகோ தெரிவித்தார். திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த பின் அவர் செய்தியாளர்களிடம் கூறிய போது பாஜக கூட்டணியில் ...