கோவையில் உள்ள ஈஷா யோக மையம் சார்பில் கடந்த சில மாதங்களாக கிராமமோத்சவம் என்ற பெயரில் 17 ஆவது ஆண்டாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது. த்ரோபால், வாலிபால் உள்ளிட்ட ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைப்பெற்றது இக்கூட்டத்தில் மருத்துவர் பாபு லட்சுமணன் பணியாளர்களின் சேவைகள் குறித்தும் உரிய ஆலோசனைகளும் வழங்கினார். முன்னதாக வால்பாறை நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மற்றும் நகர்மன்ற தலைவர் அழகு ...

கோவை : மண்டல அளவிலான உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி மேற்கு மண்டல காவல்துறை தலைவர் செந்தில்குமார் தலைமையில் கோவை மாவட்டம் மதுக்கரை.துப்பாக்கி சுடும் பயிற்சி மைதானத்தில் நடைப்பெற்றது. இதில் பிஸ்டல் மற்றும் இன்சாஸ் துப்பாக்கி பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற காவல் அதிகாரிகளின் பெயர்கள் பின்வருமாறு:- பிஸ்டல் பிரிவு ...

கோவை: இந்திய விமான நிலைய ஆணையகம் (ஏஏஐ) சார்பில் ‘பயணிகள் சேவை திருவிழா’ என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி கோவை விமான நிலையத்தில் இன்று நடந்தது. அதிகாலை முதல் விமானங்களில் வந்த பயணிகளை கல்லூரி மாணவ, மாணவிகள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் மரக் கன்றுகள் நடப்பட்டன. மேலும் மருத்துவம் முகாம், கண் ...

கோவை : தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.கார்த்திகேயன், தலைமையில், மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மேலும் மனுக்களின் மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்களை நேரில் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை எஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத்தில் மிலாது நபி விழா நேற்று வெகு சிறப்பாக நடைபெற்றது. தாலுகா காஜியார் பி.டி .பூக்கோயத் தங்கள் தொடங்கி வைக்க முத்தவல்லி என்.கே.கமாலுதீன், முத்தனூர் தங்கள் செய்யிது சிகாபுதீன், கௌரவ தலைவர் வால்பாறை வீ.அமீது, ஜமாஅத் தலைவர் கே.எம்.குஞ்சாலி மற்றும் பொறுப்பாளர்கள் முன்னிலையில் சுப்ஹ் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் ஆண்டுதோறும் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது அதேபோல இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி விழாவை முன்னிட்டு வால்பாறை சுற்றியுள்ள 60 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு கடந்த நான்கு தினங்களாக பக்தி பரவசத்தோடு சிறப்பு பூஜைகள் செய்தும் பொதுமக்களுக்கு ...

கோவையில் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ,பாரத் சேனா, அனுமன் சேனாஉள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளின் சார்பில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் பொதுக்கூட்டம் ஆர். எஸ். புரம். தெப்பக்குளம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை தாங்கினார். ...

விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி ( தமிழகம் )பாரத் சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் 722 சிலைகளும் புறநகர் பகுதிகளில் 1,680 சிலைகளும் என மொத்தம் 2,402 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பாக ரத்தினபுரி ...

அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக விநாயகர் தின நல்வாழ்த்துக்கள்…. விநாயகர் சதுர்த்தி விழா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும் ஆன்மிக பண்டிகையாகும். விநாயகப் பெருமான் ஞானம், வெற்றிகளை தரக் கூடியவர் என்பதால் அனைத்து தரப்பினரும் விநாயகரின் அருளை பெறுவதற்காக பக்தி சிரத்தையுடன் வழிபடுவது உண்டு. விநாயகரை வழிபடும் முறை மிகவும் ...