சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ...

ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற வருகின்ற பிப்ரவரி மாதம், 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளது. வருகின்ற 30ஆம் தேதி மாவட்ட தாளை தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறும் என்றும், பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள ...

ஆசிரியர் தேர்வு வாரியம், 1,500 ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என்று பள்ளி, கல்வித் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக இருந்து வருகிறது. அதே நேரத்தில் பணிபுரிய வேண்டிய ஆசிரியர்கள் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டு, நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. குறிப்பாக, ...

சேலம்: சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதன் (66), பதிவாளர் (பொ) தங்கவேல் (60),கணினி துறை இணைப் பேராசிரியர் சதீஷ்குமார் (45), திருச்சி பாரதிதாசன் பல்கலை. பேராசிரியர் ராம்கணேஷ் (54) ஆகியோர் இணைந்து, அரசு அனுமதியின்றி `பூட்டர் அறக்கட்டளை’ என்ற பெயரில் கல்வி நிறுவனம், `அப்டெக்கான் ஃபோரம்’ என்ற பெயரில் மற்றொரு அமைப்பையும் தொடங்கியதாகப் புகார்கள் ...

கோபி அருகே ஒத்தக்குதிரையில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்ட ஏழு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமின் ஒரு பகுதியாக நிறைவு விழா கவுந்தப்பாடி சமுதாயக்கூடத்தில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர்.ஆர். அண்ணாதுரை கலந்து ...

அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 5 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவியருக்கான அரையாண்டு தேர்வுகளை டிசம்பரில் நடத்த மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தியது. தொடர் மழையின் காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரையாண்டு தேர்வுகால் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது அதன்படி +1, +2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7 ...

திருச்சி வெஸ்ட்ரி பள்ளி வளாகத்தில் தொகுப்பூதிய ஆசிரியர்களின் கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இனை ஒருங்கிணைப்பாளர் டேவிட் விக்டர் வரவேற்று பேசினார். மாநாட்டிற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் இனிகோ தலைமை தாங்கினார், மாநாட்டில் நிர்வாகிகள் ஆரோக்கியதாஸ், ஐசக் டேவிட், திருநாவுக்கரசு, பாலச்சந்தர், ஈஸ்வரன், பாரதிதாசன் அமிர்தராஜ், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோரிக்கைகளைமாநில மகளிர் ஒருங்கிணைப்பாளர் ...

20 ஆண்டுகால வரலாற்றில் எங்களை தலைநிமிர வைத்தவர் தமிழ்நாடு முதல்வர் நன்றி அறிவிப்பு மாநாட்டில் சிறப்பு பயிற்றுநர்கள் உருக்கம். திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. ...

திருச்சி மாவட்டத்தில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி கரூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 143 கல்லூரிகள் வரை செயல்பட்டு வருகின்றன இந்த கல்லூரிகளில் 24 கல்லூரிகள் வரை தன்னாட்சிக் கல்லூரிகளாக செயல்பட்டு வருகின்றன. டெல்டா மாவட்டங்களான அரியலூர், தஞ்சை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல மாணவர்களுக்கு ...

தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் கலந்தாய்வு கூட்டம் தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட கல்வி அலுவலங்களில் செயல்படும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் உறுப்பினர்களின் ஓராண்டு நிறைவு கலந்தாய்வு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மேலும் திருச்சி மாவட்ட ...