சென்னை; தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளைப் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பிப்.28 முதல் மார்ச் 9-ம் தேதி வரை 10 நாட்கள் ஆபரேஷன் பிடியாணை என்ற நடவடிக்கையை டிஜிபி சைலேந்திரபாபு மேற்கொண்டுள்ளார். நிலுவையிலுள்ள அனைத்து நீதிமன்ற பிடியாணைகளையும் நிறைவேற்றுமாறு அனைத்து மாநகர காவல் ஆணையர்களுக்கும் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு ...
இந்தியா முழுவதும் வங்கி ஊழியர்களுக்கு இனி வாரத்துல அஞ்சு நாள் தான் வேலை நாட்கள். அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை தினங்களாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில், இந்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வார நாட்களில் அவர்களது பணி நேரம் ...
பொள்ளாச்சி வார மாட்டுச்சந்தை தமிழகத்தில் மிகவும் பழமையான மாட்டுச்சந்தையாகும், பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து வாரம் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் ஏராளமான மாடுகள், ஆடுகள் என விற்பனைக்கு வருகின்றன. அண்டை மாநிலம் கேரளாவிலிருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகள் மற்றும் மாடுகளை வாங்கி செல்வார்கள். தற்போது கேரளாவில் ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவை நீதிமன்றம் அருகே மற்றும் ஆவாரம்பாளையம் ரோட்டில் 2 ரவுடிகள் படுகொலை செய்யப்பட்டனர். ஆவாரம்பாளையம் ரோட்டில் நடந்த கொலையில் பலியான ரவுடி உடலில் 3 துப்பாக்கி குண்டுகள் பாய்ந்திருந்தது.பல இடங்களில் அரிவாள் வெட்டு காயம் இருந்தது .இந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது ...
கோவை மத்திய சிறையில் சிறைவாசிகளுக்கு பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இது தொடர்பாக கோவை மத்திய சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காவல் துறை இயக்குநர் மற்றும் சீா்திருத்தப் பணிகள் துறைத் தலைவர் அம்ரேஷ் பூஜாரி அறிவுரையின்படியும், கோவை சரக சிறைத் துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம் வழிகாட்டுதல்படியும் கோவை மத்திய சிறையில் உள்ள ...
கோவை உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து பழனி, பொள்ளாச்சி, உடுமலை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தினந்தோறும் 100-க்கும் அதிகமான அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் தொழில் நிமித்தமாகவும், வேலைக்காகவும் ஒரு நாளைக்கு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கோவையில் இருந்தும், பொள்ளாச்சி, பழனி பகுதிகளில் இருந்து கோவைக்கும் பயணம் ...
கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும், ஷார்ஜா, சிங்கப்பூர் நாட்டிற்கும் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விமான நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமான ஓடுபாதை சீரமைப்பு பணி தொடங்கியது. இரவு 10 மணிக்கு மேல் அதிகாலை 6 மணி வரை பணிகள் ...
கடந்த பிப்ரவரி மாதத்தில் 1.49 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 1 லட்சத்து 49 ஆயிரத்து 577 கோடி ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் ...
இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக இருக்கும் அதானி குழுமம் ஒரு சவ்ரின் வெல்த் பண்ட் நிறுவனத்திடம் இருந்து சுமார் 3 பில்லியன் டாலர் அளவிலான கடனைப் பெற்றுள்ளதாக தனது கடனாளர்களிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இல்லாவிட்டாலும், இந்த தகவல் நம்பதகுந்த வட்டாரத்தில் வந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ...
புழல் பெண்கள் தனிச்சிறையில் MSME சார்பில் விஜயகீதம் பௌன்டேஷன் மூலம் வயர் நாற்காலி,கட்டில் பின்னுதல், வயர் கூடைப் பின்னுதல், மெழுகுவர்த்தி செய்தல், மிதியடி செய்தல் ஆகிய ஒரு மாத கால பயிற்சி முடித்த 31 பெண் சிறைவாசிகளுக்கு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குனர் அமரேஷ் புஜாரி சான்றிதழ்கள் வழங்கி தலைமை உரையாற்றினார். ...