கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்ட பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறிப்பாக திருச்சி ரோடு சிந்தாமணி புதூரில் உள்ள சிக்னல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி பிரிவு சிக்னல்’ மலுமிச்சம்பட்டி சிக்னல், ஆகிய 3 சிக்னல்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அங்கு போலீசார் ...
அரக்கோணம்: அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவின் முதல் ரயில் பாதையாக கடந்த 1853-ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக வாலாஜா வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புகள் வாய்ந்த அரக்கோணம் ரயில் நிலையம் ...
மகிழ்ச்சியான சாலைகள் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை !!! இந்திய திருநாடு கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை பின்பற்றி நம் முன்னோர்கள் இருந்து வந்தனர். அதனை உலக நாடுகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வரவேற்றனர். ...
தமிழ்நாட்டில் உள்ள கோமாட்சு தொழிற்சாலையை விரிவாக்கம் செய்திட முதலமைச்சர் கோரிக்கை.. ஒசாகாவில் உள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் பார்வையிட்டு, அந்நிறுவன உயர் அலுவலர்களுடன் கலந்துரையாடினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜப்பானின் ஒசாகா நகருக்கு சென்றுள்ள முதலமைச்சர், கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி ஆலையை பார்வையிட்டார். தொழிற்சாலையின் செயல்பாடு குறித்த காட்சி விளக்க ...
கோவை:கோவை மாநகரில், கவுண்டம்பாளையம், கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கோவை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் (போத்தனுார்) என 4 புதிய போலீஸ் ஸ்டேஷன்களை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.அதன் பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழ்நாட்டில், 1574 போலீஸ் ஸ்டேஷன்கள் தற்போது உள்ளன. கோவை மாநகரில், துடியலுார் மற்றும் வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன்கள், கோவை ...
கோவை மாநகரில் 15 சட்டம் -ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது .இது தவிர 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள் , 2 போக்குவரத்து புலனாய்வு போலீஸ் நிலையங்கள் உள்ளன. இங்கு சுமார் 1500 போலீசார் பணிபுரிகிறார்கள் கோவை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தற்போது உள்ள போலீஸ் நிலையங்களின் ...
கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன். இவர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வுபெற்று சென்றுள்ளார்..அவருக்கு பதிலாக சிறப்பு நுண்ணறிவு பிரிவுஉதவி போலீஸ் கமிஷனர் மகேஸ்வரன் கூடுதலாக இந்த பொறுப்புகளை கவனித்து வந்தார்.கடந்த வாரம் கோவை மாநகர நூண்ணறிவு உதவி போலீஸ் கமிஷனராக ஆனந்த ஆரோக்கியராஜ் ...
சென்னை: தமிழ்நாடு அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் இல்லை என அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு அரசு பேருந்து 3 வயது வரையிலான குழந்தைகளுக்கு பல ஆண்டுகளாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படுவது கிடையாது. அதேபோல் பள்ளி மாணவர்களுக்கும் பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் 60 வயதுக்கும் அதிகமான முதியோர்கள் ...
சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் நேற்று 23.05.23 பிற்பகல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நீதியரசர் T.ராஜா தலைமையில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் எம்.சுந்தர், நீதியரசர் ஜி.கே.இளந்திரையன் மற்றும் நீதியரசர் ஜி.சந்திரசேகரன் ஆகியோர் சிறைக்கு வருகை தந்தனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்களால் சிறையில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறைவாசிகள் காத்திருப்பு அறை திறந்து வைக்கப்பட்டது. சிறையினுள் ...
அண்ணா காய்கறி மார்க்கெட்டை காப்பாற்றுங்கள்-வியாபாரிகள் கோரிக்கை.. அடிப்படை வசதிகள் செய்து தரும்வரை வேறு இடத்தில் கடைகளை நடத்தி கொள்ள மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ்- மறுப்பு தெரிவிக்கும் அண்ணா மார்கெட் வியாபாரிகள் கலெக்டரிடம் மனு கோவை மேட்டுப்பாளையம் சாலை சாய்பாபா கோவில் பகுதியில் அண்ணா தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 450-க்கும் மேற்பட்ட கடைகள் ...