கோவை : தென்காசி மாவட்டம் .சிவகிரியை சேர்ந்தவர் நந்தகுமார் ( வயது 33 ) இவர்பீளமேடு நவ இந்தியா பகுதியில் தங்கி இருந்து ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் ஆர் .எஸ். ரோட்டில் 15 வயது சிறுமி நடந்து சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து சென்ற நந்த குமார் திடீரென்று அந்த ...

கோவை உக்கடத்தைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 22) பட்டதாரி. இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்தார் .அப்போது பிரபல பன்னாட்டு உணவகம் அமைக்க அனுமதி வாங்கி தரப்படும் என்று அறிவிப்பை பார்த்தார். உடனே அவர் அதிலிருந்து செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினார் .அதற்கு அவர்கள் விரைவில் அதற்கான அனுமதி வாங்கி தருவதாக கூறியதுடன் அதற்கு ...

கோவை சொக்கம்புதூர் ரோட்டில் உள்ள கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் ரமேஷ் பாய் சாலிகா ( வயது 56) இவர் பொன்னையராஜபுரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா, சப் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள் . அப்போது அங்கு 21 கிலோ குட்கா ...

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜனார்த்தனன் ( வயது 20 )இவர் பெரியநாயக்கன்பாளையம் அருகில் உள்ள சாமி செட்டிபாளையத்தில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தங்கி இருந்த வீட்டின் முன் பைக்கைநிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். காலையில் பார்த்தபோது பைக்கைகாணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர் .இது குறித்து ஜனார்த்தனன் பெரியநாயக்கன்பாளையம் ...

கோவை புலியகுளம், அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் அபி என்கிற அபிலாஷ் (வயது 30) இவர் கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகில் கஞ்சா விற்பனை செய்ததாக 22 -6-20 20 அன்று கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இவர் மீது கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ...

சென்னை: பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22ஆம் தேதி தொடங்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டில் 446 கல்லூரிகளில் உள்ள 1.54 லட்சம் இடங்களுக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் ...

கோடநாடு வழக்கில் கொள்ளை நிகழ்ந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்களை உதகை நீதிமன்றத்தில் ஒப்படைப்பு… மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24-ஆம் தேதி காவலாளி ஒருவர் 11 பேர் கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன. அதில், முக்கிய குற்றவாளியான கனகராஜ் ...

கோவை கணபதிபுதூர் 6-வது வீதியை சேர்ந்தவர் சண்முகம் .அவரது மனைவி தனலட்சுமி ( வயது 65) இவர் நேற்று சிவானந்த காலனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது உறவினரை பார்ப்பதற்காக கணபதியில் இருந்து டவுன் பஸ்சில் காந்திபுரத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது யாரோ இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை நைசாக ...

கோவை உக்கடம் சிலேட்டர் அவுஸ் காலனியை சேர்ந்தவர் கார்த்திக்.இவரது மனைவி தனலட்சுமி (வயது 24) இவர்களுக்கு 7 -9 -20 22 அன்று திருமணம் நடந்தது.திருமணத்திற்கு முன் கார்த்திக் தன்னை ஐ.டி டிப்ளமோ படித்துவிட்டு வேலை பார்ப்பதாகவும் சொந்த வீடு இருப்பதாகவும் கூறி திருமணம் முடித்தார்.திருமணத்திற்கு பின்பு அவர் எந்த வேலைக்கும் செல்லாமல், சேவல் சண்டை ...

கோவை மண்டல குடிமை பொருள் குற்றப்பலனாய்வுத் துறை போலீசார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- குடிமை பொருள் வழங்கல்குற்றப்புலனாய்வு துறை போலீஸ் ஐ.ஜி. காமினி உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி மேற்பார்வையில் கோவை நீலகிரி, ஈரோடு, , திருப்பூர், சேலம், , கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மேற்கு மண்டலத்தில் ரேஷன் அரிசி ...