ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 16 வது ஆட்டத்தில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை நேற்று செப்டம்பர் 24ம் தேதி புதன்கிழமை வென்று இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது. இதன் மூலமாக இந்தியா, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. நடப்பு சாம்பியன் இலங்கை வெளியேற்றப்பட்டது. ...

இந்தியாவின் பொருளாதாரம் மேலும் வலுவடையும்போது மக்கள் மீதான வரிச்சுமை குறையும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் 5 நாள்கள் நடைபெறும் சர்வதேச வர்த்தகக் கண்காட்சியைப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த கண்காட்சி கௌதம புத்தா நகர் மாவட்டத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் இன்று முதல் செப்.29 வரை நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சியில் ...

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆண்டு ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் 27 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்த வழக்கை செம்பியம் போலீஸாா் நியாயமாக விசாரிக்கவில்லை. இந்தக் கொலையில் அரசியல்வாதிகளுக்கு தொடா்பு உள்ளது. எனவே, விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் ...

ஸ்ரீநகர்: லடாக்குக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரி நடந்த போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் எடுத்த நடவடிக்கை காரணமாக, போராட்டக்காரர்கள் வன்முறையில் குதித்தனர். இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த உயிர் பலிக்கு போராட்டக்காரர்கள்தான் காரணம் என மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த ...

ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலை புலிகள் காப்பக வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர காட்டுத்தீ பரவியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் வசித்த வனவிலங்குகள் வெப்பம் தாங்காமல் ஓட்டம் பிடித்துள்ளதாகவும், இதனையடுத்து தீயணைப்பு படையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீ வில்லிபுத்தூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மேகமலை ...

வாஷிங்டன்: உலகம் முழுவதும் ஆண்டுக்கு சுமார் 81 லட்சம் மக்கள் காற்று மாசு காரணமாக பலியாகின்றனர். இந்நிலையில், இதற்கு காரணமான நடவடிக்கையை இத்துடன் நிறுத்திக்கொள்வதாக சீன அதிபர் ஐநா சபையில் அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது. சீனா உலகின் மிகப்பெரிய வல்லரசாக மாறி வருகிறது. அந்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி அமெரிக்காவையே மிஞ்சிவிடும் அளவுக்கு ...

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று மதியம் சென்னை அடையாறில் உள்ள அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் உரையாடியுள்ளார். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் நீக்கப்பட்டவர்கள் அத்தனை பேரும் மீண்டும் இணைக்கப்பட வேண்டும், ஒருங்கிணைந்த பலமான அதிமுக உருவாக்கப்பட வேண்டும், அப்போதுதான் 2026 சட்டமன்றத் தேர்தலில் ...

வாஷிங்டன்: ஜெனிவாவில் நடந்த ஐநா கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேச முயன்றபோது மைக் வேலை செய்யவில்லை. மேடைக்கு செல்ல முயன்றபோது நகரும் படிக்கட்டுகள் வேலை செய்யவில்லை. அதேபோல டெலிபிராம்ப்டரும் வேலை செய்யவில்லை. இதையெல்லாம் தனக்கு எதிரான சதி டிரம்ப் விமர்சித்திருக்கிறார். டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோர் பிரதான மேடைக்குச் செல்லும் ...

டெல்லி: இந்திய ராணுவம் அக்னி-பிரைம் ஏவுகணையை ரயிலிருந்து ஏவி சோதனை செய்திருக்கிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும், சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இது தாக்கி அழிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார். இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் ஏவுகணை, 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது மேம்பட்ட ...

கோவை சரவணம்பட்டி காந்திமா நகரில் உள்ள தனியார் மருத்துவமனை பின்புறம் நேற்று ஒரு அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 40 வயது இருக்கும். அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை.இது குறித்துகணபதி கிழக்கு பகுதி கிராம நிர்வாக அதிகாரி பழனிச்சாமி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத ...