தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பநிலை கடுமையாக உயர்ந்து பல்வேறு மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸை கடந்துள்ளது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 41°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூர் 40.4°C, திருச்சி 40.1°C, மதுரை 40.2°C, ஈரோடு 40°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும், சேலம் ...
தனது தாயாரின் இறுதிச் சடங்கில் பரோலில் வந்து சவுக்கு சங்கர் பங்கேற்றார். சவுக்கு சங்கர் தாயாரின் மறைவுக்கு பழனிசாமி உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். சவுக்கு மீடியா சிஇஓவும் யூடியூபருமான சங்கர் மீதான இரு மோசடி வழக்குகளில், ஆதம்பாக்கம், சைதாப்பேட்டை போலீஸார் அவரை 2025 டிச.13-ம் தேதி கைது செய்தனர். அவரை ...
இந்திய கடற்படையின் அடுத்த தலைமுறை ஏவுகணை கப்பல் திட்டத்திற்காக, 18 அதிநவீன ‘கமேவா’ வாட்டர்ஜெட் உந்துவிசை அமைப்புகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை நார்வேயைச் சேர்ந்த கோங்ஸ்பெர்க் மேரிடைம் நிறுவனம் பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய கடற்படைக்கு தேவையான வாட்டர்ஜெட் கருவிகளை வழங்க நார்வே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான கப்பல்களில் காணப்படும் விசிறி போன்ற ...
தமிழகத்தில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் இன்று (புதன்கிழமை) முதல் அமலுக்கு வருவதால் 15 ஆயிரம் விசைப்படகுகள் கடலுக்குச் செல்லாது. தமிழகத்தின் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணை கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப் பெருக்க காலமாக, மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் ...
இந்திய விவசாயிகளின் நீண்ட காலப் பயத்திற்கு ஒரு முடிவு கட்டும் விதமாக, “கிசான் மித்ரா” என்ற மின்னணு கருவியை மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிமுகப்படுத்தியுள்ளார்.. மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் பகுதியில் நடந்த வேளாண் திருவிழாவில் அறிமுகமான இந்த கருவி, பார்ப்பதற்குச் சாதாரண நடைப்பயிற்சி குச்சி போல இருந்தாலும், 100 மீட்டர் ...
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள ஒரு பிரபல பிபிஓ நிறுவனத்தில் அரங்கேறிய பாலியல் வன்கொடுமை மற்றும் கட்டாய மதமாற்றப் புகார்கள் இந்தியாவையே உலுக்கியுள்ளன. இந்த விவகாரத்தில் குற்றவாளிகளைப் பிடிக்க நாசிக் போலீஸ் கமிஷனர் சந்தீப் கர்னிக் தலைமையிலான ‘ஸ்பெஷல் 7’ குழுவினர் சினிமா பாணியில் அதிரடி ஆப்பரேஷன் ஒன்றை நடத்தினர். ஏழு பெண் போலீஸ் அதிகாரிகள், ...
ஆப்பிரிக்க நாடான உகாண்டாவின் ராணுவ தளபதி முஹூசி கெய்னெருகாபா துருக்கி நாட்டுக்கு விடுத்துள்ள அதிரடி மிரட்டல் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது. தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “துருக்கி அரசு எங்களுக்கு ஒரு பில்லியன் டாலர் (சுமார் ₹9,000 கோடி) பணம் தர வேண்டும்; அதோடு துருக்கியின் மிக அழகான பெண்ணை எனக்குத் ...
இந்தியாவில் யுபிஐ (UPI) பணப்பரிவர்த்தனை மிகவும் பிரபலமடைந்து வரும் வேளையில், கவனக்குறைவால் தவறான நபருக்குப் பணம் அனுப்பப்படும் சிக்கல்களும் அதிகரித்துள்ளன. யுபிஐ ஐடி-யில் ஏற்படும் தட்டச்சுப் பிழை அல்லது தவறான பெயரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் இது நிகழ்கிறது. ஒருமுறை அனுப்பப்பட்ட பணத்தை நேரடியாக ரத்து செய்யும் வசதி யுபிஐ செயலிகளில் இல்லை என்பதால், இத்தகைய சூழலில் ...
மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் மகளின் பாதம் அகற்றப்பட்டதாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒருவர் தலைமைச் செயலக நுழைவு வாயிலில் திமுக கொடியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டார். திருவள்ளூர் அடுத்த காக்களூரை சேர்ந்தவர் கோதண்டபாணி (44), ஆவடி டேக்ங் பேக்டரி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றுகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 ஆண் ...
வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தை பரிமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை களைய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் ...













