கோவை மாநகர காவல் துறை நுண்ணறிவு பிரிவில் போலீஸ் ஏட்டாக பணிபுரிந்து வந்தவர் கனகராஜ் ( வயது 43) இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். கோவை புதூரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். குனியமுத்தூர் காவல் நிலைய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார். நேற்று அதிகாலை 5 மணி அளவில் வீட்டில் வைத்து ...
சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைகளை எளிமையாக்க ‘காற்று மற்றும் நீர் சட்டங்களின்’ கீழ் சீரான வழிகாட்டுதல்களில் மத்திய அரசு திருத்தம் செய்துள்ளது. இதனால், அனுமதி வாங்குவதற்கான காலதாமதம் குறையும்; விதிமுறை அமலாக்கம் வலுப்பெறும் என்று மத்திய அரச் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்றத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: ...
சென்னை: பத்திரப்பதிவின்போது சம்பந்தப்பட்ட சொத்தின் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்வதை கட்டாயமாக்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், 2025 ஏப்ரல் மாதம் பத்திரப்பதிவில் புதிய விதிகளை சேர்ப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். இந்த மசோதாவுக்கு, ஜனாதிபதி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, பதிவுச்சட்டத்தில் தமிழ்நாடு அரசு ...
தமிழக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு அரசு ‘தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புற திறன் பயிற்சித் திட்டத்தின்’ கீழ் இலவசத் தொழில் பயிற்சிகளையும், மாதந்தோறும் 1,200 ரூபாய் உதவித்தொகையையும் அறிவித்துள்ளது. மத்திய அரசின் 60% மற்றும் மாநில அரசின் 40% நிதி பங்களிப்புடன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்னை ...
அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சக்திவாய்ந்த புயல், அமெரிக்காவின் 12 மாகாணங்களில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி டிரம்ப் அங்கு அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை சுமார் 14 கோடி மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பலத்த காற்றினாலும், பனிப்பொழிவினாலும் மின் கம்பிகள் அறுந்து வீழ்ந்ததில், சுமார் 9 ...
ஜன நாயகன் திரைப்படத்துக்கான தணிக்கைச் சான்றிதழை உடனடியாக வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி. ஆஷா விசாரிக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. ‘ஜன நாயகன்’ திரைப்படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் ...
தமிழகத்தின் மக்கள்தொகையின் வேகமான வளர்ச்சி, நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் ஆகியவற்றின் காரணமாக மாநிலத்தின் மேற்பரப்பு நீர் மற்றும் நிலத்தடி நீர் வளங்களின் மீதான நீர் நெருக்கடி அதிகரித்து வருகிறது. ஒழுங்குமுறைப்படுத்தப்படாத நீர் பிரித்தெடுப்பு மற்றும் முறையற்ற நீர் பயன்பாடு ஆகியவை நீர் பாதுகாப்பு மற்றும் நீர் சூழலமைப்புகளின் நிலைத்தன்மையை பாதித்துள்ளது. நிலத்தடி ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர் இந்நிலையில் எஸ்டேட் பகுதிகளில் உள்ள வாழை மரங்கள் மற்றும் புதர்களை அளிக்கும் பணியை தீவிரப்படுத்தி வரும் நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் பகுதியில் அதேபோல வாழை மரங்களை அழிக்கும் ...
சென்னை: வாரத்தில் இரண்டு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள்) விடுமுறை வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுக்க வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். வங்கி ஊழியர்கள் சம்மேளனத்துடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தற்போது நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் ...
நீண்ட கால வறட்சிக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் இந்தப் பனிப்பொழிவு, ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், மறுபுறம் போக்குவரத்து மற்றும் கல்வி நிலையங்களின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் ஓடுதளத்தில் பனி குவிந்ததால், சுமார் 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-ஸ்ரீநகர் ...













