கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்டப்பட்ட ஜி.டி. நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது . ரூ.1,671 கோடியில் இந்தமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலே முதல் நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இந்த பாலம் பெற்றுள்ளது. இந்த பாலத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக வேக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ...
பறவை காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-பறவை காய்ச்சல் என்பது பெரும்பாலும் பறவைகளுக்கு இடையே பரவும் ஒரு வைரஸ் நோய் ஆகும். பாதிக்கப்பட்ட பறவைகளிடமிருந்து மற்ற பறவைகளுக்கு பரவுவதால் பறவை இறப்பை வைத்து இறந்த பறவைகளின் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்படுகிறது. ...
கடந்த மாதம் சென்னையில், குறிப்பாக அடையாறு மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில், தொடர்ச்சியாக பதிவான காகங்களின் அசாதாரண இறப்புகளுக்கு தற்போது H5N1 நோய்க்கிருமி பறவைக் காய்ச்சல் (HPAI) காரணமாக இருக்கலாம் என அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது. தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத் துறையின் விலங்கு நோய் நுண்ணறிவுப் பிரிவு, ஜனவரி மாதத்தின் நான்காவது வாரத்தில் சென்னை நகரப் பகுதிகளில் ...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்ட 500 க்கும் மேற்பட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். காலமுறை ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சத்துணவு அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர் நிலையில் ...
புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகவே ஆண்டுதோறும் பிப்ரவரி 4-ம் தேதி உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் முக்கிய நோக்கம், உலகளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், நோய் தடுப்புக்கான சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதுமாகும். முறையான உணவுமுறை, உடற்பயிற்சி, பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் இந்த நோயின் பாதிப்பில் ...
ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஜப்பானின் அமோர் நகரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து, 2 மீட்டர் உயரத்துக்கு பனி கட்டிகள் படிந்துள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் இருந்து சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் ஊழியர்களுடன் ...
தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வீடும், தெருவும், நகரமும் சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்திருப்பது தூய்மை பணியாளர்களின் பணியாகும். அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல லட்சம் தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் தமிழகத்தில் 12,524 கிராம பஞ்சாயத்துகளிலும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, 150 வீடுகளுக்கு ஒரு தூய்மைக் காவலர் என, அவுட்சோர்சிங் அடிப்படையில் ...
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் சமபந்தி நிகழ்வில், நரிக்குறவர் குழந்தைகளுக்கு, அனுமதி மறுக்கப்பட்டது கடும் விமர்சனத்திற்க்கு உள்ளாகி இருக்கிறது. முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவு தினத்தை ஒட்டி, நெல்லையப்பர் கோவிலில் சம்பந்தி நடந்தது. சபாநாயகர் அப்பாவு உட்பட பலர் இதில் பங்கேற்றனர். சாப்பிட வந்த நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளை, அறநிலையத்துறை ஊழியர்கள், சாப்பாடு இல்லை எனக் ...
விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள மனித உருவ ரோபோ, குற்றவாளிகளை அடையாளம் கண்டு காவல் துறையிடம் தெரிவித்து, பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்திய ரயில்வேயில் முதன்முறையாக ஆந்திரப்பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மனித உருவ பாதுகாப்பு ரோபோ தான், இன்றைய ஹாட் டாபிக். ஏஎஸ்சி அர்ஜுன் என்ற பெயர் கொண்ட இந்த ...
தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, தங்களுக்கு வழங்கப்படவில்லை எனக் கூறி, கோவை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் கல்லூரி நுழைவாயில் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டப் படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் 3 ஆண்டு சட்டப் படிப்பு என இரு பிரிவுகள் உள்ளன. இதில் 5 ஆண்டு காலப் படிப்பு இறுதி ...













