பயனர்களின் தரவுகளை கசிய விட்ட கூகுள்… ரூ.11,740 கோடி அபராதம்… அமெரிக்க நீதிமன்றம் அதிரடி உத்தரவு .!!
கூகுள் பயனர்களின் தகவல்களை கசிய விட்டதற்காக அந்நிறுவனத்திற்கு 1.4 பில்லியன் டாலர்களை அபராதமாக (ரூ. 11740 கோடி) செலுத்த வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. கடந்த சில வாரமாக இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. ...
கோவை மே 14 கோவை ரயில் நிலையம் ரோட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் உள்ளது.இதன் எதிர் புறம் உள்ள ரோட்டில் நேற்று ஒருவர் மயங்கி கிடந்தார்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவருக்கு 30 வயது இருக்கும்.அவர் யார்? ...
கோவை கொடிசியா வளாகத்தில் வருகின்ற ஜூன் மாதம் 10ம்தேதி குழந்தைகளின் கல்வி நலனிற்க்காகவும், குடும்ப ஐஸ்வர்யத்திற்க்காகவும் 1008 திருவிளக்கு பூஜையும், கோவை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது வழங்கும் விழாவும் நடைபெற உள்ளது. அதன் தொடக்கமாக இன்று கோவையில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கோவை திருவிளக்கு திருவிழா ...
கோவை மே 14 கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர் குப்பை கிடங்கியில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் கட்டப்பட்டது .பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அந்த பகுதியில் சிலர் தினமும் நடைப்பயிற்சி செய்து வருகிறார்கள் .இந்த நிலையில் கடந்த 11 – ந் தேதி காலையில் அங்கு சிலர் நடை பயிற்சி செய்தனர். அப்போது ...
கோவை மே 14கோவை உக்கடம் ,புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் முனிசாமி ( வயது 80) இவர் ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில்தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகள் வெண்ணிலா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ...
கோவை மே 14 கோவை போத்தனூர் கணேசபுரம், ருக்மணி நகரை சேர்ந்தவர் முருகேசன் .இவரது மனைவி பிரேமா ( வயது 50) டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று மாலை கடையிலிருந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது பின்னால் இருந்து பைக்கில் வந்த ...
கோவை மே 14 கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பூண்டியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி மலை இருக்கிறது. இதில் 7 மலைகளை கடந்து சென்றால் அங்கு சுயம்புலிங்க ஆண்டவர் வீற்றிருக்கிறார். தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் ...
கோவை மே 14 மதுரையை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது 2 நண்பர்களுடன் ரத்தினபுரி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அவர்கள் ...
கோவை மே 14 சென்னையில் இருந்து கோவை வழியாக பாலக்காடு செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருந்தது.அதில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் முதல் இருக்கையில் ஒரு பெண் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் இரண்டாவது படுக்கையில் பயணம் செய்த ஒருவர் பாத்ரூம் செல்வதற்காக கீழே இறங்கினார்.அப்போது அந்த இருக்கையின் சங்கிலி கழண்டு படுக்கை விழுந்தது. இதனால் முதல் ...
சமீபத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடந்த மோதலின் போது துருக்கி மற்றும் சீனா கொடுத்த ஆயுதங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியது. இதையடுத்து இந்திய மக்கள் துருக்கி பொருட்களை புறக்கணிக்க ஆரம்பித்திருக்கின்றனர். துருக்கி பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை சமூக வலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. துருக்கியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் அதிக அளவில் ஆப்பிள் இறக்குமதி ...













