கோவை மதுக்கரை அருகே போலீசார் இன்று காலையில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது கேரளாவுக்கு சென்ற ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் . அதில் 20 டன் ஜெலட்டின் குச்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்த ஜெலட்டின் குச்சிகளை சேலத்தில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு கடத்திச் சென்றது தெரிய வந்தது ...

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கோவையில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி 712 விநாயகர் சிலைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிலைகளுக்கு தேவையான பாதுகாப்புகள் அளிக்கப்படும். பாதுகாப்புக்காக 1,800 போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். குனியமுத்தூரில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. மற்ற பகுதிகளிலும் நடைபெறும் சிலை கரைக்கப்படும் முதலாம் நாள் மற்றும் 3-வது ...

கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் அருண்,சாய்பாபா காலனி இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வினோத் ஆகியோர் கோவை சரகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கஸ்தூரி, சிங்காநல்லூர் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா, ரத்தினபுரி இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் ரேஸ்கோர்ஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமிஆகியோர் சேலம் சரகத்திற்கு பணியிட ...

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியை சேர்ந்த ஹரிகரன் (25)என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக நாகப்பன் (23)என்பவர் மீது பெரியநாயக்கன்பாளையம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். பொது அமைதிக்கும் சட்ட ஒழுங்கிற்கும் பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக நாகப்பன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ...

கோவை அருகே உள்ள வடவள்ளி ஐ.ஓ.பி காலனி, கணபதி நகரை சேர்ந்தவர் செல்வநாயகம். கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர்.இதனால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார் . இந்த நிலையில் அவர் நேற்று அவரது வீட்டில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு ...

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அன்பு நகர் 2-வது வீதியில் வசிப்பவர் சுகுமார் ( வயது 47) ரயில்வேயில் சீனியர் என்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 23.ஆம் தேதி வீட்டை  பூட்டிவிட்டு குடும்பத்துடன் அவரது சகோதரர் வீட்டுக்கு சென்று விட்டார்.. திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது ...

கோவை அருகே உள்ள மதுக்கரை தாலுகா அலுவலகத்தில் குற்றவியல் மற்றும் உரிமைகள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்தின் பூட்டு கடந்த 16-ஆம் தேதி உடைக்கப்பட்டு ஆவணங்களை சிதறி கிடந்தன . இதுகுறித்து மதுக்கரை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் திண்டுக்கலை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் சுப்ரீம் கோர்ட்டில் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்..இவரது மனைவி பிரியா ( வயது 57 )இவர் தனது மகளுடன் அதே பகுதியில் உள்ள வேல்முருகன் ( வயது 41) என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு வசித்து வந்தார் .இந்த நிலையில் பிரியா அவருக்கு சொந்தமான ஒரு ...

கோவை : திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று அதிகாலை 2 – 05 மணி அளவில் கோவை ஆபராம்பாளையம் ரயில்வே பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தில் கான்கிரீட் கல்கள் வைக்கப்பட்டு இருந்தது .அந்த கல் மீது ஏறிய ரயில் அதனை உடைத்து நொறுக்கியபடி சென்றது .இதனால் பயங்கர சத்தம் ...

சென்னை: பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி மற்றும் அவருக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தை கடன் மோசடியாளர் என்று பாங்க் ஆஃப் இந்தியா வகைப்படுத்தியிருக்கிறது.. இது தொடர்பாக அனில் அம்பானிக்கு வங்கி முறைப்படி தகவல் தெரிவித்திருக்கிறது.. கடந்த 2 நாட்களாக அனில் அம்பானி வீட்டில் சிபிஐ ரெய்டு அதிரடியாக நடந்த நிலையில், இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருப்பது, ...