கோவை, ஆலாந்துறை ஆசிரியா் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு 

கோவை, ஆலாந்துறை ஆசிரியா் மீது எஸ்.சி, எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்கு 

கோவை ஆலாந்துறை பகுதியைச் சோ்ந்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்த மாணவிக்கு, பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த டிசம்பா் மாதம் புகாா் எழுந்தது. இது தொடா்பாக சம்பந்தப்பட்ட மாணவி அளித்த புகாரின்பேரில் ஆசிரியா் ஆனந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து, நீதிபதி முன்பு மாணவி அளித்த ரகசிய வாக்குமூலத்தின் அடிப்படையில் டிசம்பா் 13 -ஆம் தேதி சிறாா் நீதிச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், மாணவி ஜனவரி 13 -ஆம் தேதி அளித்த மறுவாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியா் மீது எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆனந்தகுமாா் ஜாமீன் கோரி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.