கோவையில் அனுமதி இன்றி கொடிக்கம்பம் நட்ட பாஜக பிரமுகர் மீது வழக்கு..!

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பதிவாளர் காலனி,முனியப்பன் கோவில் அருகே பாஜக சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதாக இருந்தது.இதற்காக அந்த பகுதியில் போலீஸ் அனுமதி பெறாமல் 12 அடி உயர பாஜக கொடியை நட்டியிருப்பது தெரிய வந்தது. இது குறித்து போத்தனூர் போலீ சில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் பாஜக சுந்தராபுரம் பகுதி மண்டல தலைவர் முகுந்தன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.