ஜம்மு காஷ்மீர்: காஷ்மீரின் பந்திப்போராவில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் பயங்கரவாதியும், கமாண்டருமான அல்தாப் லல்லி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். காஷ்மீர் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் துணை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட் பொறுப்பேற்ற நிலையில் ராணுவம் மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நுழைந்து ...

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் ...

ஜம்மு காஷ்மீரின் பகல்காமில் பயங்கரவாதிகளால் 26 சுற்றுலா பயணிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ‘மோகன் பகவத்’ மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவர் தெரிவிக்கையில்,”பகல்காமில் நடந்த தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். மக்களிடம் பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தைப் பற்றி கேட்ட பிறகு ...

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து லண்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பு இந்திய வம்சாவளியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜம்மு – காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கொடூர பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாட்டில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை ...

சமீபகாலமாக அதிமுக நிகழ்ச்சிகளைத் தவிர்த்து வந்த செங்கோட்டையன் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அவருக்கு முதல் வரிசையில் இடமளிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றார். அண்மைகாலமாக கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் தவிர்த்து வந்த நிலையில் இன்று கலந்துகொண்டார். ...

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு யு.பி.எஸ்.சி. சார்பில் ஆண்டுதோறும் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அந்தவகையில் முதல் நிலைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். அதனைத் தொடர்ந்து முதன்மைத் தேர்வில் தேர்ச்சி நேர்முகத் தேர்வில் ...

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர். இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் இந்த பஹல்காம், ...

ஸ்ரீநகர்: எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இரண்டாவது நாளாக சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இந்திய ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்து வருவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா். கா்நாடகம், ...

உதகை ஏப்ரல் 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் குசெல்வப்பெருந்தகை MLA அவர்கள் ஆணைக்கிணங்க,நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் R.கணேஷ் உதகை சட்டமன்ற உறுப்பினர் வழிகாட்டுதலின்படி உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கிற வகையில் ஏப்ரல் 25,26 ம் தேதிகளில் உதகையில் துனை வேந்தர்கள் மாநாட்டை கூட்டுகிற ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் சட்ட ...

210பாட்டில் பறிமுதல் . கோவை ஏப் 26 கோவை சரவணம்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் நேற்று விளாங் குறிச்சி ரோட்டில்உள்ள டாஸ்மாக் கடையில் (எண் 1716) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சட்ட விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக ஆர். எஸ். ...