கோவையை சேர்ந்தவர் 28 வயது பெண் .இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனது கணக்கில் பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி வேலை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணின் புகைப்படத்தை ஆபாச படங்களாக மாற்றி சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதை பார்த்து ...

கேரளாவுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வழியாக தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் போத்தனூரில் இருந்து மதுக்கரை வழியாக கேரளாவுக்குஒரு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் மீது கல்வீசியதில் அதில் பயணம் செய்த 12 வயது சிறுமி படுகாயம்அடைந்தார். அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்து போத்தனூர் ரயில்வே ...

கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் வாலிபர் ஒருவர் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.அவர் சென்னையில் வைத்து கொலை செய்யப்பட்டு காரில் கடத்தி வந்து மலுமிச்சம்பட்டியில் உள்ள கிணற்றில் போடப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த முருக பெருமான் மலுமிச்சம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் ஆகிய 2 பேர் போலீசில் சரணடைந்தனர். விசாரணையில் இறந்தவர் நெல்லை ...

கோவை கணபதி அருகில் உள்ள மணியக்காரன் பாளையத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள 2 கண்காணிப்பு கேமராவின் கண்ணாடியில் மை பூசி யாரோ அழித்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது பற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது.போலீஸ் கமிஷனர் சரவண ...

கோவை மற்றும் ஈரோடு ஆகிய மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 429 கஞ்சா வழக்குகளில் சுமார் 1612.166 கிலோ கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.போதை பொருள் அழிப்பு குழு தலைவரான கோவை சரக டி.ஐ.ஜி.சசிமோகன், மற்றும் போதை பொருள் அழிப்பு குழுவினர் முன்னிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா முழுவதும் நீதிமன்ற ...

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. வெள்ளநீரில் சிக்கிய ஒரு மாபெரும் முதலையை, வனத்துறை அதிகாரிகளுக்காக காத்திருக்காமல், தைரியமான கிராமவாசிகள் தாமே மீட்டு பாதுகாப்பாக ஆற்றில் விட்டனர். வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்ட முதலை ஒரு நிலப்பகுதியில் சிக்கியது. கிராமவாசிகள், உயிருக்கு ஆபத்தான இந்த வன உயிரினத்தை கயிறுகளால் கட்டி ...

சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் நாளை உலகெங்கும் வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை நோக்கி உள்ளது.இந்த ஆண்டுடன் திரை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் ...

அதிமுக முன்னாள் எம்.பி மைத்ரேயன் அக்கட்சியிலிருந்து விலகி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலைகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு முக்கிய தலைவர்கள் மாறுவது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ...

கோவை துடியலூர் வடமதுரை அருகே உள்ள தொப்பம்பட்டி, அருள் ஜோதி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 62 )இவர் நேற்று கோவை – மேட்டுப்பாளையம் ரோட்டில் ஜோஸ் நகர் தொப்பம்பட்டி பிரிவு அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் இவரது பைக் மீது மோதியது. இதில் ரவிச்சந்திரன் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அப்பார்ட்மெண்ட் முன் உள்ள குப்பை தொட்டி அருகே பிறந்து 3 நாட்களான பெண் குழந்தை பிணமாக கிடந்தது நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சிக்கதாசம் பாளையம் கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று குழந்தை பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் ...