கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான துயர சம்பவம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் டெல்லியில் சிபிஐ அதிகாரிகள் மார்ச் 17-ந் தேதி விசாரணை நடத்தினர். டெல்லியில் நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர் சென்னை திரும்பிய செந்தில் பாலாஜி, விமான நிலையத்தில் நேற்று இரவு செய்தியாளர்களிடம் ...
நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் இதற்கு மாற்றை பலரும் தேடி வருகின்றனர்.அந்த வகையில் இளைஞர் ஒருவரின் புதிய கண்டுபிடிப்பான ராக்கெட் அடுப்பு மிகவும் கவனம் ஈர்த்து வருகிறது.இந்தியாவில் சமையல் எரிவாயுவின் (LPG) விலை சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்த்து வரும் வேளையில், அதற்கு மாற்றாக மிகக் குறைந்த செலவில் இயங்கும் ...
புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 3 பேரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது. ஒடிசாவில் பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மாஜி முதல்வராக உள்ளார். இந்நிலையில் நேற்று ஒடிசாவில் ராஜ்யசபா தேர்தல் நடந்தது. மொத்தம் 4 இடங்களுக்கு தேர்தல் ...
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. மகேஸ்வர் தயாள் நேற்று மாலை கோவை வந்தார். இன்று காலையில் ரேஸ் கோர்சில் உள்ள மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகத்திற்குச் சென்றார். அங்கு ஐ.ஜி. சரவண சுந்தர் மற்றும் டி.ஐ.ஜி.க்கள், எஸ்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். ...
கோவை கலெக்டர் அலுவலகத்தில் திருமண மண்டப உரிமையாளர்கள் பேனர் பிளக்ஸ் அச்சகங்கள் உரிமையாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் பவன் குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மாவட்டத்தில் உள்ள ...
கோவையில் நேற்று மாலை திடீரென்று மழை பெய்தது .இதன் காரணமாக மாநகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவிநாசி ரோடு மேம்பாலம், வடகோவை மேம்பாலம் கீழ்பகுதி, மற்றும் ரயில்வே சுரங்க பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி சென்றன.மேலும் சாய்பாபா காலனி சாலையில் மேம்பால பணிகளாலும் திடீர் மழையாலும் சாலை சேரும் ,சகதியுமாகி ...
சினிமா நடிகைகளை பற்றி தவறாக பேசுவது அரசியல் நாகரிகமா? இதைத்தான் உங்கள் கொள்கை சொல்கிறதா?தலைவர்கள் கற்றுக் கொடுத்தார்களா? என நடிகர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை கண்டித்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சையாக ...
இன்று ‘ஜனநாயகன்’ மறுதணிக்கை செய்யப்படவுள்ளது. விரைவில் தணிக்கை சான்றிதழுடன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என விநியோகஸ்தர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருக்கிறார்கள். விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் மறுதணிக்கை இன்று பிற்பகல் நடைபெறுகிறது. இதன் முடிவினை எதிர்நோக்கி தயாரிப்பாளர் மட்டுமன்றி விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். இந்த தணிக்கை முடிந்தவுடன், தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிடும் என்ற ...
நடிகர் ரஜினிகாந்த் குறித்து தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகள் பெரும் விவாதத்தை கிஏற்படுத்தியுள்ளது .இந்த விவகாரம் சமூக வலைதளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் தீவிரமாக பேசப்பட்ட நிலையில், தற்போது ஆதவ் அர்ஜுனா தனது நிலைப்பாட்டை விளக்கியுள்ளார் . சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு போராட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, ரஜினிகாந்த் அரசியலில் இருந்து ...
சென்னை: திமுக ஆட்சியில் போதைப் பொருள்கள் புழக்கம் அதிகரிப்பு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டைக் கண்டித்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.2021-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு திமுகவினுடைய ஆட்சியில் தமிழ்நாடு கஞ்சா, கள்ளச் சாராயம், போதைப் பொருள் மாஃபியாக்களின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் ...













