மாடியிலிருந்து தவறி விழுந்து வங்கி அதிகாரி பலி..

கோவை அருகே பெரியநாயக்கன்பாளையம் ரங்கா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 54) இவர் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கனரா வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். நேற்று அவரது வீட்டில் 30 அடி உயரத்தில் மாடியில் நின்று துணி காய போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது கால் தவறி கீழே விழுந்தார்.இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனை எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் இது குறித்து அவரது மனைவி சௌமியா தேவி பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.