வேங்கைவயல் விவகாரம்… மேலும் 6 பேருக்கு DNA பரிசோதனை..!

தூத்துக்குடி: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன.

மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 25 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.