கோவையில் 45 போதை மாத்திரைகளுடன் ஆட்டோ டிரைவர் கைது..!

கோவை கடைவீதி காவல் நிலையஇன்ஸ்பெக்டர் தெய்வமணி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் நேற்று உக்கடம் புல்லுக்காடு பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 45 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக கரும்புக்கடை சேரன் நகரை சேர்ந்த சபிக் என்ற கீலி ( வயது 25 )கைது செய்யப்பட்டார். இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.