கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள வடபுதூரை சேர்ந்தவர் சரவணன். தனியார் நிறுவனத்தில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மகேஸ்வேரி(வயது28). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சரவணன் கடந்த 10 வருடங்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உறவினர்கள் அவர்களை சமாதானம் ...
தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் சென்னை – கோவை உட்பட மூன்று வந்தே பாரத் ரயில்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த ரயில்களில் டிக்கெட் முன்பதிவு, 100 சதவீதத்துக்கு மேல் உள்ளது என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை சென்ட்ரல் – கோவை, கேரளா காசர்கோடு – ...
கோவை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்படும் ஆவின் பாலகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர். கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆவின் பாலகங்கள் செயல்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் ஆவின் பொருட்களான பால், பால்கோவா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படாமல், டீ, காபி, வடை, பஜ்ஜி, இட்லி, தோசை உள்ளிட்ட ...
நீலகிரி மாவட்டம் உதகை கோடப்பம்மந்து பகுதியில் சில நாட்களாகவே விவசாயிகளின் வளர்க்கும் மாடுகள் அம்மை நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன,இதில் பல மாடுகள் இறந்தும் உள்ளது, பலமுறை கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கைகள் சீராக எடுக்காததால் தற்போது கால்நடைகளுக்கு அம்மை நோய் பரவி வருகிறது, முன்கூட்டியே தடுப்பூசி போடப்பட்டிருந்தால் அம்மை நோய் பரவாமலும் மாடுகளும் இறக்காமல் ...
நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித் தலைவர் சா.ப.அம்ரித் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் நடைபெற்ற மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.பிரபாகர், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ...
கோவை சீரநாயக்கன்பாளையம் அருகே உள்ள கருமலை செட்டிபாளையத்தில் மாநகர சுகாதார மையம் (அர்பன்ஹெல்த் வெல்னஸ் சென்டர்)உள்ளது. இங்கு நேற்று முன்தினம் விரைவில் யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த கம்யூட்டர்,மானிட்டர் கீபோர்ட் ,மவுஸ் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சுகாதார இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் ஆர் .எஸ். புரம் போலீசில் புகார் செய்துள்ளார். ...
கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் ராமானுஜம் நகர், காமராஜ் ரோட்டை சேர்ந்தவர் சாகுல் அமீது .இவரது மனைவி சதிகா (வயது 27) இவர்களுக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது .5 வயதில் ஒரு மகன் உள்ளான். இந்த நிலையில் கணவர் சாகுல் அமீது மாமனார் முகமது இம்தியாஸ் ,சகோதரர் முகமது இப்ரான் மாமியார் சுல்தானி ...
கோவை அருகே உள்ள ஒத்தக்கால் மண்டபம், வேலாந்தவளம் ரோட்டை சேர்ந்தவர்.32 வயது பெண் இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தார்..அப்போது அந்தப் பெண்ணின் கணவரான ஆதிநாராயணன் ( வயது 34) அவரது நண்பரான கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 37) ஆகியோர் குடிபோதையில் அவரது வீட்டில் புகுந்தனர். குளிர்பானத்தில் மதுகலந்து கொடுத்து ...
சத்தியமங்கலம்: தமிழ்நாடு அரசு சார்பில் ஜூலை 18 ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. காவல்துறை சார்பில் தமிழ்நாடு தினம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை சத்தியமங்கலம் ஏஎஸ்பி ஐமன் ஜமால் தொடங்கி வைத்தார். பள்ளியிலிருந்து ...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1090 மது பாட்டில்களை போலீசார் அழித்தனர். கொரோனா கால கட்டத்தித்தில் மது கடத்தலை தடுக்க போலீசார் ரோந்து பணியில் இருந்து வந்தனர். அப்போது திண்டுக்கலில் இருந்து அலங்கியம் வழியாக தாராபுரம் மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இருசக்கர வாகனம் ...