கோவைஒண்டிப்புதூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தில் 1970-ம் ஆண்டு கந்தசாமி தேவர் – குணவதி தம்பதியருக்கு 5-வது மகனாக சிவலிங்கேஸ்வரர் பிறந்தவர். பள்ளிப்படிப்பு வரை படித்தவருக்கு ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் ஏற்பட்டது. நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, காமாட்சிபுரம் நொய்யல் ஆற்றங்கரையில் அங்காள பரமேஸ்வரி அம்மன் சிலையினை கண்டெடுத்து அப்பகுதியில் கோவில் அமைத்து வழிபாடுகள் செய்து வந்தார். ...

கோவை மாவட்டம் : அன்னூர் பஸ் நிலையம் அருகில் உள்ள மொபைல் கடையில் சுவரில் துளையிட்டு 7 விலை உயர்ந்த செல்போன் மற்றும் பணம் ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டுப் போனது. இது தொடர்பாக அன்னூர்போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்மந்தப்பட்ட எதிரியை பிடிக்க கோவை மாவட்ட ...

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர். கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள்.. காலை 6 மணி முதல் மற்றும் 19 ம் தேதி காலை 11 ...

சென்னை: உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, எஸ்பிஐ வங்கி அளித்த தேர்தல் பத்திரங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ தளத்தில் அண்மையில் பதிவேற்றம் செய்தது. இதில் அரசியல் கட்சிகளில் அதிகபட்சமாக ரூ.6,060.5 கோடியை நிதியாக பெற்றுள்ளது பாஜக. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜக மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இந்த சூழலில் இது குறித்து தமிழக ...

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். குறிப்பாக அம்பை கோடாரங்குளம் விலக்கு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அந்த வழியாக சொகுசு கார் ஒன்று வந்துள்ளது. அப்போது அதனை நிறுத்தி சோதனை செய்ததில் காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளனர். தொடர்ந்து காரை திறந்து சோதனை ...

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு அமல்படுத்தியுள்ளதை கண்டித்து தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கினார். அவர் பேசியதாவது: நாடாளுமன்றத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்ட போதே மிகக் ...

தமிழக மின்வாரியம், கேபிள், மின்கம்பம், டிரான்ஸ்பார்மர், மின் வினியோக பெட்டி உள்ளிட்ட சாதனங்கள் உதவியுடன் மின் வினியோகம் செய்கிறது. பொதுமக்கள், தங்களின் வீடு அருகில் உள்ள மின் சாதனங்களை அகற்ற, மின் வாரியத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்காக ஏற்படும் மொத்த செலவும் மதிப்பிடப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வசூலிக்கப்படும். தமிழகத்தில் மின்சார வாரியத்தில் மின்கம்பம், மின் சாதனைகளை மாற்ற ...

பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவரும், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், முழு அடைப்பு போராட்டத்திற்கு பிஆர்எஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு ...

இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்க நாளை காலை விமானம் மூலம் மும்பை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி, திமுக உள்ளிட்டு 25 மேற்பட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் புதிய அமைப்பினை உருவாக்கின. இந்த கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா ...

டெல்லி: கருப்பு பணத்தை ஒழிக்கவே தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை முழுமையாக ஒழிப்பதற்கு பதிலாக அதை மேம்படுத்தியிருக்கலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறேன் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்க பயன்படுத்தப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் தேர்தல் ...