யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே அதே சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி ...

சென்னை : சிங்கப்பூர் நாட்டின் லாரன்ஸ் வோங்க் நேற்றைய நாளில் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார். கடந்த 20 ஆண்டுகாலமாக சிங்கப்பூர் நாட்டின் பிரதமராக இருக்கும் லீ சியென் லூங் தனது பிரதமர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். மேலும், அந்நாட்டின் துணைப் பிரேதமாராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த லாரன்ஸ் வோங்க் நேற்று இரவு முறைப்படி பிரதமர் பதவியை ...

நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ள இறுதிகட்ட தேர்தலில் வாரணாசியில் பா.ஜ.க. வேட்பாளராக பிரதமர் மோடி களமிறங்கியுள்ளார். இதற்கான வேட்புமனுவை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தாக்கல் ...

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் (சிஏஏ) விண்ணப்பித்த 300 பேருக்கு, இந்திய குடியுரிமை சான்றிதழ்களை முதல்முறையாக மத்திய அரசு நேற்று வழங்கியது. மதரீதியான துன்புறுத்தல் காரணமாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் அடைக்கலம் புகுந்த அந்நாட்டு சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், ...

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டு அரசு முதலீட்டில் இயங்கும் அனைத்து நிறுவனங்களையும் தனியார்மயமாக்கும் திட்டத்தை பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாகிஸ்தான் மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது, அதேவேளையில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மீன்கரை – கிழவன் புதூர் ரோட்டில் ஆனைமலை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வேட்டைக்காரன் புதூர் சிவசங்கர் (வயது 28 ) மணிகண்டன் ( ...

சென்னையில் உள்ள நேசப்பாக்கம்,பாரதி நகரை சேர்ந்தவர் சேகர் (வயது 63 கட்டிட தொழிலாளி.)இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது உறவினர் முருகன் வீட்டுக்கு வந்தார்.அவருடன் சேர்ந்துவெள்ளலூர் ரோட்டில் உள்ள வேலன் நகரில் ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று 35 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார் ...

கோவை மாவட்டம் நெகமம் பக்கம் உள்ள பெரியகளந்தையைச் சேர்ந்தவர் மயில்சாமி ( வயது 60) இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் சிவகுமார் ( வயது 35) இவரது அண்ணன் பழனிச்சாமி ( வயது 37) அங்குள்ள தெரு குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இந்த நிலையில் 7- 5 -18 ...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இ.டி.ஐ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் ...

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்தும் அவர்களது பணி குறித்தும் மிகவும் இழிவாக youtube சேனல் ஒன்றில் பேசியது தொடர்பாக சவுக்கு சங்கர் ஏற்கனவே கோவையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் அந்த காணொளியின் காரணமாக மிகப்பெரிய அளவில் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் பல்வேறு ...