கோவை : கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், காந்திகிராமத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம். இவரது மனைவி மஞ்சுளா ( வயது 64 )இவர் கண் பரிசோதனை செய்வதற்காக ஆர். எஸ். புரம் ,டி.பி. ரோட்டில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு வந்தார். காந்திபுரத்தில் இருந்து ஆர் எஸ் புரம் செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறினார். கண் மருத்துமனை ...
கோவை சி.எஸ்.ஐ.யில் பணியாற்றி வந்த போதகர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருக்கு சரியான ஊதியம் வழங்கபடவில்லை என்பது உட்பட பல்வேறு புகாரை அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் கொடுத்தார் . இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக பிஷப் திமோத்தி ரவீந்தருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து பிஷப் திமோத்தி ரவீந்தர் நேற்று மாலை கோவை மாநகர ...
.கோவை பீளமேடு ,சக்தி நகரை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மகள் சாதனா (வயது 13 )அங்குள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் வீட்டில் படிக்காமல் அடிக்கடி டி.வி .பார்த்துக் கொண்டிருந்தார். இதை அவரது தாயார் கண்டித்தார் .இதனால் மனம் உடைந்த சாதனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரம் சேலையை விட்டத்தில் ...
கோவை மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதன் அடிப்படையில் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரளா லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பொள்ளாச்சி தாலுகா காவல் ...
கோவை போத்தனூர் அருகில் உள்ள வெள்ளலூர், பசுபதி வீதியை சேர்ந்த சிவகுமார். இவரது மனைவி சாந்தி (வயது 27) இவர்கள் இருவரும் நேற்று சரக்கு ஆட்டோவில் அங்குள்ள கஞ்சிக்கோணம் பாளையம் ரோட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 திருநங்கைகள் ஆட்டோவை முந்தி சென்று தடுத்து நிறுத்தினார்கள். பின்னர் சாந்தியிடமும், ...
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே உள்ள வாகராயம்பாளையம், விக்னேஸ்வரா காலனி சேர்ந்தவர் அமிர்தராஜ் ( வயது 47) விவசாயி. இவர் தனது முதல் மனைவியான ஆசிரியையாக பணிபுரிந்து வந்த விஜயா என்பவரை லாரி ஏற்றி கொலை செய்துவிட்டு அவர் விபத்தில் உயிரிழந்தது போல நாடகம் ஆடினார். இதற்கு அவரின் நண்பரான விசைத்தறி உரிமையாளர் இளங்கோவன் ( ...
திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திருச்சி மத்திய மாவட்ட வடக்கு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டம் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் செயல் வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ...
திருச்சியில் அ.தி.மு.க., மாநகர், வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களின் கள ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கோகுல இந்திரா ஆகியோருடன் திருச்சி மாவட்ட அ.தி.மு.க., செயலர்கள் கலந்து கொண்டனர். தெய்வாதீனம்கூட்டத்தில் திண்டுக்கல் சீனிவாசன் பேசியதாவது: ஜெயலலிதாவின் தோழி சசிகலா, தமிழக முதல்வராக பதவி ஏற்க இருந்தார். அந்த ...
சபரிமலையில் கடந்த 4 நாட்களில் 2.26 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மண்டல பூஜைக்காக கடந்த 15ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (16-ந்தேதி) மண்டல பூஜை தொடங்கி நடந்துவரும் நிலையில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்த சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்கள் கூட்ட ...
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மூலம் இஸ்ரோவின் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவி வருகிறது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு வந்தன. அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ...













