கோவை : வணிகர்களுக்கு சுமையாக கடைகளில் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை உடனே திரும்ப பெற வேண்டும் என்பதை வற்புறுத்தியும்,வணிகர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டிக் கொண்டிருக்கும் அந்நிய நாட்டு ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்ய கோரியும், மத்திய அரசின் கடைகளின் வாடகை மீதான 18 சதவீத வரி விதிப்பை திரும்ப பெற்றிட வலியுறுத்தியும், மாநில ...

கோவை மதுக்கரை பக்கம் உள்ள வாளையாறு சோதனைசாவடி அருகே கே.ஜி.சாவடி போலீசார் நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர்.அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகளை ஒருவர் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் பீளமேட்டை சேர்ந்த சிமோய் ராஜ் (வயது49 ) என்பது தெரியவந்தது. ...

கோவை மாவட்டம் கணியூர் பக்கம் உள்ள செல்லப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 64) விவசாயி. இவர் முன்தினம் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது வலது காலில் பாம்பு கடித்தது அவரை சிகிச்சைக்காககோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார் .இது குறித்து அவரது மகன் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். விவசாயி. இவர் திருமணம் செய்ய பெண் தேடி வந்தார். இந்த நிலையில் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். அதில் அவருடைய புகைப்படம் விவரம் மற்றும் செல்போன் எண்ணும் கொடுத்திருந்தார். அந்த நிலையில் அந்த வாலிபரின் செல்போன் எண்ணுக்கு ஒரு பெண் தொடர்பு கொண்டார். ...

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பஸ் ஸ்டாப்பில்நேற்று இரவு ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவர் திடீரென்று அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் அடியில் பாய்ந்தார். பின் சக்கரத்தில் சிக்கி அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டுபிரேத பரிசோதனைக்காக ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா, குட்கா வேட்டை நடந்து வருகிறது . இந்த நிலையில் சூலூர் காவல் நிலைய போலீசார் சூலூர் “போட் ஹவுஸ் பார்க் ” அருகே நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் ...

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டத்திற்கு உட்பட்ட உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் தேசிய புலிகள் காப்பக ஆணையம் வழிகாட்டுதலின் படி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மழை காலத்திற்கு பிந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 7 ஆம் தேதி தொடங்கி வரும் 14 ஆம் தேதி வரை தொடர்ந்து ...

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் 2ம் நாளாக இன்று நடைபெற்று வருகிறது. நேற்று, மதுரை டங்ஸ்டன் சுரங்க ஆலை அமைக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு திட்டத்திற்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது. தற்போது சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்களும், முதல்வரும் பதில் அளித்து வருகின்றனர். ...

பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் அதன் ஒரே நாடு ஒரே தேர்தல் முன்முயற்சியுடன் முன்னேறி வருவதாகவும் நடப்பு கூட்டத்தொடரில் ஒரு மசோதாவை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற ராம்நாத் கோவிந்த் கமிட்டியின் அறிக்கைக்கு அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது மேலும் பரந்த ...

கோவை உக்கடம் வின்சென்ட் ரோடு கிரீன் கார்டன் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் நஜ்முதீன் ( வயது 61) இவர் உக்கடம் கிரீன் கார்டன் அசோசியேஷன் முன்னாள் தலைவர் ஆவார். இவரிடம் அதே பகுதியில் வசிக்கும் தற்போதைய தலைவர் முகமது முஸ்தபா (வயது 52) சங்கத்துக்கு கொடுக்க வேண்டிய பாக்கி பணம் ரூ.40 ஆயிரத்தை கேட்டாராம். அப்போது ...