இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (IOA) பொருளாளரும், உத்தரப்பிரதேச ஒலிம்பிக் சங்கச் செயலாளருமான ஆனந்தேஸ்வர் பாண்டே, பல பெண்களுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகின்றன. இந்த நிலையில், உயர் பதவியில் இருக்கும் விளையாட்டுத்துறை அதிகாரி ஆனந்தேஸ்வர் பாண்டேவின் இத்தகைய சர்ச்சையான புகைப்படங்கள் குறித்து, லக்னோ பிராந்திய விளையாட்டு உயரதிகாரிகள் கடந்த வாரம் அவரிடம் விளக்கம் ...

திருச்சி: ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.83 லட்சம் ரொக்கம், தங்கம் 305 கிராம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருக்கும். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பிரசித்தி பெற்றதாகும். பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த பக்தர்கள் சொர்க்க வாசலை ...

அமெரிக்காவிற்கு அடுத்த பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா குறைந்த காலகட்டத்தில் வேகமாக வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக இருந்தது உற்பத்தித் துறை தான். தற்போது இதே உற்பத்தித் துறைக்குத் தான் பல பிரச்சனைகள் வந்துள்ளன, குறிப்பாக அமெரிக்கா – சீனா வர்த்தகப் போருக்கு பின்பும், சீனா – தைவான் பிரச்சனைக்கு பின்பும் சீனா-வை இனியும் ...

சென்னை: சென்னையில் அதிமுக தலைமை அலுவலத்தில் வன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 7 பேர் மீது ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னையில் கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி அதிமுகவின் எடப்பாடி கோஷ்டியினர் பொதுக்குழுவை கூட்டினர். அப்பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அதே நாளில் சென்னை ராயப்பேட்டை அதிமுக ...

ஓதிமலை சாலையில் இயற்கை உபாதை கழிக்க சென்றவரின் இருசக்கர வாகனத்தை திருடிய மூவர் கைது அன்னூர் போலீசார் விசாரணை… ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (40).இவர் தனது சொந்த வேலையாக கடந்த 23 ஆம் தேதி அன்று அன்னூர் வந்த பொழுது ஓதிமலை சாலையில் உள்ள சுமைதாங்கி பகுதியின் அருகே இரு சக்கர ...

ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து ஈபிஎஸ் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு. அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ், வைரமுத்து தொடர்ந்த வழக்கில், அதிமுகவில் ஜூன் 23-ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்கும் என்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் ...

தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 40 லட்சம் மோசடி: போலி நகைகளை அடைத்து அடகு வைத்த பெண் ஊழியர் கைது கோவை குனியமுத்தூர் ஐ.சி.எப் பின்காரப் நிதி நிறுவனம் மேலாளர் வினோத்குமார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். நிதி நிறுவனத்தின் கணக்குகளை தணிக்கை செய்த போது போல நகைகளை அடகு வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கஞ்சா கடததல் வழக்கில் கைதான பெண்ணுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஈரோடு அருகே உள்ள வீரப்பம்பாளையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ...

கடந்த 10 வருடங்களில் மின்சார துறையில் கடன் ரூ.12,647 கோடி உயர்ந்துள்ளது. இதனையடுத்து பொதுமக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் கட்டணம் மாற்றப்படும் என தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு கூடுதலாக ரூ.27.50 கட்டணம் வசூலிக்கப்படும். 201- 300 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ.72.50 கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். ...

“தவறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பதிவு செய்யப்படாத பத்திரிகைகள் தடை செய்யப்படும்” என்று, புதுவை முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 22-ம் தேதி, 2022 – 2023-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத் தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. ...