இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களால் மீண்டும் பரபரப்பு..!!

டலூர் மற்றும் சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு எதிரான நாடு முழுவதும் சோதனை நடத்தப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பிற்கு நாடு முழுவதும் 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள துணை ஆணையர்கள் முழு உஷார் நிலையில் உள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் ,சிதம்பரத்தில் இந்து முன்னணி ஆதரவாளர் வீட்டில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.