சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்கள் கவனமுடன் பணியாற்ற வேண்டும் என்றும், யாரும் உணர்ச்சிவசப்பட்டு எதையும் பேசக்கூடாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழக சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டம் 17-ம் தேதி தொடங்குகிறது… எனவே, சட்டப்பேரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்க, முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று ...
இந்திய கடற்படையின் ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து நடத்தப்பட்ட அணு ஆயுதம் ஏந்திச் செல்லக் கூடிய ஏவுகணையின் சோதனை வெற்றி அடைந்ததாக, ராணுவம் தெரிவித்துள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கக் கூடிய ‘அரிஹந்த்’ நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவுகணை ஏவும் சோதனை நேற்று நடத்தப்பட்டது. வங்கக் கடல் பகுதியில் நடந்த இந்த சோதனையின் போது, நிர்ணயிக்கப்பட்ட ...
இமாச்சல பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நேற்று (அக்.14) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், இமாச்சல பிரதேசத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதாகக் கூறினார். வேட்புமனு தாக்கல் வரும் 17ஆம் தேதி ...
பிரிட்டன் நாட்டை கடலில் மூழ்கடிக்க வல்ல நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை ஐரோப்பாவுக்கு அருகில் புதின் அனுப்பியுள்ளதாக வெளியான தகவல் அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல் என கருதப்படும் K-329 Belgorod என்னும் கப்பல், ரஷ்யாவுக்கு வடக்கே, Barents கடலில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை என்னவென்றால், Barents கடலின் அருகில் தான் ஐரோப்பாவின் ...
சென்னை: சென்னை – பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மாணவி சத்யாவை கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன. இதையடுத்து, போலீஸார் ஈசிஆரில் சதீஷை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்படுப்பட்டார். அவரை 14 ...
அண்மையில் கேரளாவில் தமிழகத்தைச் சேர்ந்த பெண் உட்பட இருவர் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் இதேபோல் திருவண்ணாமலையில் வீட்டை பூட்டிக் கொண்டு மாந்திரீகம் சிலர் செய்ததாகவும், நரபலி கொடுப்பதாகவும் வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த கச்சராபேட்டை கிராமத்தில் வசித்து வந்த தவமணி-காமாட்சி தம்பதியினருக்கு பூவரசன், பாலாஜி ...
கோவை : சேலத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் ( வயது 27) இவர் கோவையில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். இவர் கோவையை சேர்ந்த 16 வயது நிரம்பிய பிளஸ் 1 மாணவியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று ஒருதலை பட்சமாக காதலித்ததாக கூறப்படுகிறது .ஆனால் அந்த மாணவி மகேந்திரனிடம் பேசுவதை தவிர்த்து உள்ளார். இந்த ...
சூலூரில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள மதியழகன் நகரைச் சேர்ந்த சிறுவர்கள் அகிலன் (10), சஸ்வந்த் (8), சஞ்சீவ் (7) ஆகியோர் சூலூர் குளக்கரையில் விளையாடுவது வழக்கம்.நேற்று மாலை மூவரும் குளக்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது குளத்தில் தவறி விழுந்தனர். இதனை அருகில் இருந்து ...
கோவை: உலகம் முழுவதும் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இந்தியாவில் தீபாவளி உள்பட எந்த ஒரு பண்டிகை கொண்டாடப்பட்டாலும், வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களும் அதனை கொண்டாடுவார்கள். தமிழர்களின் பண்டிகையான பொங்கல் பண்டிகையின்போது வளைகுடா நாடுகள் மற்றும் சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவார்கள். இதற்காக அந்த ...
கோவை: பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) என்ற அமைப்பு நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் தீவிரவாத செயல்களுக்கு ஆட்கள் சேர்த்ததாக பல்வேறு புகார்கள் அந்த அமைப்பின் மீது எழுந்தது. இது, தொடர்பாக கடந்த மாதம் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. சோதனையின் போது பலர் ...