கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள தொட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் ரம்யா (வயது 31). சம்பவத்தன்று இவர் விறகு அடுப்பில் தண்ணீர் சுட வைத்து கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ரம்யாவின் ஆடையில் தீ பிடித்தது. கண் இமைக்கும் நேரத்தில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. இதில் வலி ...
கோவையில் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை சார்பில் தனியார் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதற்கு, உதவி இயக்குநர் (மருந்து கட்டுப்பாட்டுத் துறை) குருபாரதி தலைமை வகித்தார் கூட்டத்தில் அவர் பேசியதாவது: கோவை மாவட்டத்தில் பனி, வெயில் போன்ற பருவநிலை மாற்றத்தால் காய்ச்சல் பாதிப்புகள் அதிக அளவில் ஏற்பட்டு வருகின்றன. இதற்கு பெரும்பாலானவா்கள் மருத்துவரிடம் ...
கோவை: திருவள்ளுவர் தினமான ஜனவரி 16 ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிா்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவள்ளுவர் தினம் வருகிற ஜனவரி 16ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு, கோழிகளை வதை செய்வது, இறைச்சி ...
கோவை: ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழனின் கனவுகளைத் தாங்கி’ என்ற தலைப்பில் கோவை வ.உ.சி. மைதானத்தில் அரசின் புகைப்படக் கண்காட்சி ஜனவரி 13 முதல் 21 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை, வ.உ.சி. மைதானத்தில் அரசின் துறைகளை ...
கோவை கடைகளில் விற்பனை செய்யப்பட்ட ஐஎஸ்ஐ தரமுத்திரை இல்லாத பொம்மைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்திய தர நிர்ணய அமைவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கோவை தர நிர்ணய அமைவனம் கூறியிருப்பதாவது: கோவையில் உள்ள இந்திய தர நிர்ணய அமைவன இணை இயக்குநர்கள் எஸ்.நாகவல்லி, ஜீவானந்தம், உதவி இயக்குநர் கே.கவின் ஆகியோர் கோவையில் உள்ள இரு பொம்மை ...
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் டிசம்பா், ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படும். தற்போது ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் உறைபனி கொட்டி வருவதால் புல்வெளிகள் பனி போா்த்திய நிலையில் வெண்மையாக காட்சியளிக்கின்றன. புற்கள் மற்றும் வாகனங்களில் வெண்மையாக படா்ந்துள்ள உறைபனியை சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் கண்டு ரசித்துச் செல்கின்றனா். கடும் ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, கணபதி கார்டனை சேர்ந்தவர் கற்குவேல் அய்யனார், இவர் துபாயில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஹேமா. இவர்களின் மகன் ஹரிஹரன் ( வயது 21) இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் .தற்போது அந்த நாட்டுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியதால் ஆன்லைன் ...
அமெரிக்க விண்வெளி நிறுவனமாக நாசாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏசி சரனியா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். உலகில் முன்னணி விண்வெளி நிறுவனமான நாசா பல புதிய கண்டுபிடிப்புகளையும்,தகவல்களையும் உலகிற்கு தெரியப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்ற உலகெங்கிலும் உள்ள திறமையானவர்கள் போட்டியிடுவர். அந்த வகையில், இந்தியாவைச் சேர்ந்த பல விஞ்ஞானிகள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்ற்னர். தற்போது ...
இந்தியாவின் மொத்த நேரடி வரி வசூல் நடப்பு நிதியாண்டில் ஜனவரி 10 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 24.58 சதவீதம் வரையில் உயர்ந்து 14.71 லட்சம் கோடியாக உயர்ந்து உள்ளது. இந்திய அரசின் நேரடி வரி வசூலில் ஏற்பட்ட தடாலடி உயர்வுக்கு மிகவும் முக்கியமான காரணமாகத் தனிநபர் வருமான வரி அதிகரிப்பு பெரும் பங்கு வகித்துள்ளது ...
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சோலார் மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். திருவாரூரில் சோலார் பூங்கா உள்பட அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் சோலார் திட்டம் கொண்டு வரப்படும் என தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். வழக்கமான மின்சாரத்திற்கு மாற்றாக, மின் உற்பத்தி செய்வதில் ஒட்டுமொத்த நாட்டிற்கே ...












