தாயார் ஹீராபென் மறைவை அடுத்து, பிரதமர் மோடி அகமதாபாத் சென்றடைந்தார். விமான தளத்தில் இருந்து தனது தம்பி பங்கஜ் மோடியின் வீட்டுக்கு பிரதமர் சென்றார். அங்கு வைக்கப்பட்டுள்ள தனது தாயின் உடலை பார்த்து, சொல்ல முடியாத துயரத்தில் கண் கலங்கி அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பிரதமர் மோடி 7800 கோடியில் ...

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ரிஷப் பண்ட் விளையாடினார். இதைத் தொடர்ந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் பங்கேற்கிறது. இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணி ...

டெல்லி: பாகிஸ்தான் உளவு அமைப்புடன் இணைந்து விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க சில சக்திகள் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக திருச்சியில் அண்மையில் கைது செய்யபப்ட்ட 9 பேரிடம் விசாரணை நடத்த இலங்கை அதிகாரிகள் குழு இந்தியா வருகை தர உள்ளதாக கொழும்பு ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாமில் ...

பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசம் அடைந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், “அப்படியெல்லாம் இல்லையே.. இங்க எல்லாம் நார்மலாதானே இருக்கு” என்ற ரீதியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை கோபமடையச் செய்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் சீனா தங்கள் நாட்டு கொரோனா பாதிப்புகளை ...

வாக்களிப்பது வயது வந்த அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உரிமை. ஆனால் பலர் வீட்டை விட்டு வெளியூர்களிலும் வெளிநாடுகளிலும் இருப்பதால் வாக்களிக்க முடியாமல் தவிக்கின்றனர். ஆனால், தற்போது வீட்டை விட்டு வெளியில் வசிப்பவர்களும் வாக்களிக்கக்கூடிய வகையில் தேர்தல் ஆணையம் ஒரு புதிய தீர்வைக் கொண்டு வந்துள்ளது. அதாவது தேர்தல் ஆணையம் உள்நாட்டு வெளிநாட்டு வாக்காளர்களுக்காக ரிமோட் ...

உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை உலக நாடுகள் தீவிரப்படுத்தி வருகின்றன. மத்திய அரசாங்கமும் பல்வேறு உத்தரவுகளை மாநில அரசுக்கு பிறப்பித்துள்ளது. எந்த வகையிலும் கொரோனா பரவலுக்கு மாநில அரசாங்கங்கள் வழிவகை செய்து விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு உத்தரவுகளும், அறிவிப்புகளும் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ...

சபரிமலையில் வரும் ஜனவரி 14 அன்று மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ள நிலையில் இன்று டிசம்பர் 30 மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது. இன்று முதல் ஜனவரி 20 ஆம் தேதி வரை சபரிமலை நடை திறந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலையில் தற்போது மண்டல பூஜை முடிந்த நிலையில் அடுத்த மகர ...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 82. தென்அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (வயது 82). கடந்த ஆண்டு பீலேவுக்கு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் கடந்த 2021ம் ஆண்டு பீலே, புற்றுநோய் பாதிப்புக்காக கீமோதெரபி சிகிச்சை ...

புதுவை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள, அரசின் எந்த உதவியும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு ரூ1,000/- உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வழங்க முடிவு செய்துள்ளோம். பொங்கலுக்குள் இந்த உதவித்தொகை வழங்கப்படும். பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள், ...

அகமதாபாத்: உடல்நலக்குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள UN மேத்தா நெஞ்சக மருத்துவமனை மற்றும் ஆய்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி. குஜராத்தின் காந்தி நகரில் உள்ள பிருந்தாவன் சொசைட்டி பகுதியில் உள்ள தனது இளைய மகனும் பிரதமர் மோடியின் சகோதருமான பங்கஜ் ...