பயணிகளின் கவனத்திற்கு… கோவை வழியாக இயக்கப்படும் ரயில்களின் நேரம் இன்றும் மற்றும் நாளையும் மாற்றம்..!!

கோவை வழியாக செல்லும் ரயில்கள் இன்று மற்றும் நாளை தாமதமாக
இயக்கப்படுகிறது. இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம்
வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டி
உள்ளது. இதனால் கே.எஸ்.ஆர் பெங்களூருவில் இருந்து கோவைக்கு இன்று
பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட வேண்டிய உதய் எக்ஸ்பிரஸ் ரயில்
(எண்:22665), ஒரு மணி நேரம் தாமதமாக பிற்பகல் 3.15 மணிக்கு கோவை
புறப்பட்டு வந்தது. ஆலப்புழாவில் இருந்து இன்று காலை 6 மணிக்கு தன்பாத்துக்கு கோவை வழியாக புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352), ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு புறப்பட்டது. இதேபோன்று ஆலப்புழாவில் இருந்து நாளை காலை 6 மணிக்கு தன்பாத்துக்கு கோவை வழியாக புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:13352), ஒரு மணி நேரம் தாமதமாக காலை 7 மணிக்கு புறப்படும். கோவை வழியாக எர்ணாகுளத்தில் இருந்து நாளை காலை 8.30 மணிக்கு பிலாஸ்பூர் புறப்பட்டுச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண்:22816), 2 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக காலை 11.15 மணிக்கு புறப்பட்டுச் செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து இன்று பிற்பகல் 1.15 மணிக்கு கோவை வழியாக
மங்களூரு சென்ட்ரல் புறப்பட்டு வரும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்
(எண்:22637), வரும் வழியில் தேவையான இடத்தில் 35 நிமிடங்கள்
நிறுத்தி வைத்து இயக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.