கோவை கல்லூரி மாணவர் மீது தாக்குதல்- வாலிபர் கைது..!

கோவை ராமநாதபுரம் வள்ளியம்மாள் வீதியைச் சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் சிவராம பாண்டியன் (வயது 23) இவர் பீளமேட்டில் உள்ள தனியார் கல்லூரியில் எம் எஸ் சி படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள பேக்கரி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் .தினேஷ் ஆகியோருக்கும் சிவராம பாண்டியனுக்கும் இடையே முன்விரோதம் காரணமாக வாய் தகராறு ஏற்பட்டது . இதில் ஆத்திரமடைந்த ஜீவானந்தம் ‘தினேஷ் ஆகியோர் சேர்ந்து சிவராம பாண்டியனை சரமாரியாக தாக்கினார்கள். இதில் இவரது முகத்தில் காயம் ஏற்பட்டது.இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ஜீவானந்தம் (வயது 26 )என்பவரை கைது செய்தனர். தினேஷ் குமாரை தேடி வருகிறார்கள்.