கோவையில் 4 வடமாநில நகை தொழிலாளர்கள் மீது தாக்குதல் – மர்ம ஆசாமிகளுக்கு வலை..!

கோவை , இடையர் வீதி,சலீவன் வீதி, செட்டிவீதி, ஆகிய இடங்களில் ஏராளமான நகைப் பட்டறைகள் உள்ளன .இந்த பட்டறைகளில் பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா.உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள் .இந்த நிலையில் நேற்று மாலை இடையர் வீதியில் தங்க பட்டறையில் பணிபுரியும் 4 வட மாநில தொழிலாளர்கள் அங்குள்ள மாகாளி அம்மன் கோவில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிள் வந்த ஒரு கும்பல் அங்கு நின்று கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது திடீரென்று தாக்குதல் நடத்திவிட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது .இதில் 4 வட மாநில தொழிலாளர்கள் சூர்யபிரகாஷ் பிரகாஷ், பிரகதீஷ், வேல்முருகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் .இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.