ஒர்க்ஷாப் அதிபருக்கு கத்திக்குத்து – தொழிலாளி கைது..!

கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் கதிரேசன் ( வயது 42) இவர் உக்கடத்தில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது ஒர்க் ஷாப்பில் உக்கடம் புல்லுக்காடு பகுதியை சேர்ந்த ரியாஸ்கான் ( வயது 24 )பணிபுரிந்து வந்தார். இவர் தனது சம்பளத்தை உயர்த்தி தருமாறு கதிரேசனிடம் கேட்டுள்ளார். அப்போது கதிரேசன் ஒரு மாதம் கழித்து சம்பளத்தை உயர்த்தி தருவதாக கூறினார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது .இதில் ஆத்திரம் அடைந்து கதிரேசனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இவர் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து ரியாஸ் கானை நேற்று கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.