கோவை கார் குண்டு வெடித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

கோவை கோட்டைமேட்டில் உள்ள சங்கமேஸ்வரர் கோவில் முன் கடந்த 23ஆம் தேதி அதிகாலை 4 மணி அளவில் காரில் மர்ம பொருள் வெடித்து. இதில் கோட்டைமேடு எச் எம்.பி.ஆர் வீதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.இது தொடர்பாக 6. தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டை நடந்து வந்தது. இதில் தொடர்புடைய 5பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.இதில் தொடர்புடைய கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டை சேர்ந்த அப்சர் கான் (28) என்பவரை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். இவர் ஆன்லைன் ஷாப்பிங் இணையதளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் மூலம்வெடிக்கும் பொருட்களான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சல்பர், போன்ற வெடிபொருட்களை வாங்கினார். இவர் ஞாயிற்றுக்கிழமை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு நடந்த கார் வெடி விபத்தில் உயிரிழந்த ஜமீஷா முபினின் நெருங்கிய உறவினர் ஆவார்.இவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.