சென்னை மாநகரப் பேருந்தில் ஒலிபெருக்கி மூலம் பேருந்து நிறுத்தம் அறிவிப்பு – இன்று முதல் அமல்..!

சென்னை மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் குறித்த ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது.

சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் பேருந்து நிறுத்தம் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கும் திட்டம் இன்று அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, சென்னை மாநகரப் பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேருந்து நிறுத்தம் குறித்து பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.

அதாவது பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டருக்கு முன்னதாக குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.