கோவையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை..!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் கூடுதுறையை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 30). இவரது மனைவி பிரியதர்ஷினி (26).

இவர்கள் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் பார்த்திபனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த பார்த்திபன், பிரியதர்ஷினியை கன்னத்தில் அறைந்தார். இதனை நினைத்து பிரியதர்ஷினி மனவேதனையுடன் இருந்து வந்தார். சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆனுப்பி வைத்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகனை தவிக்கவிட்டு காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.