ஆவடி போலீஸ் கமிஷனர் ஆபிஸ் அருகே கணவருடன் சென்ற பள்ளி ஆசிரியை கழுத்தில் இருந்த 6 சவரன் தங்க செயின் அபேஸ்.!!

ஆவடியை அடுத்த திருநின்றவூர் மேல பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் இவரது மனைவி தீபா லட்சுமி வயது 46. இவர் இதே பகுதியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரும் இவரது கணவரும் போலீஸ் கமிஷனர் ஆபீஸ் அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர். இவர்களைத் தொடர்ந்து வந்த மர்ம ஆசாமிகள் தீபா லட்சுமி கழுத்தில் கிடந்த 6 சவரன் தங்கச்சங்கிலியை லபக்கென்று பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தீபா லட்சுமி திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அவர் போலீசாரிடம் கூறியதாவது என்கிட்ட துப்பாக்கி இருந்திருந்தால் கொள்ளையர்களை தைரியமாக சு ட்டு பிடித்து இருப்பேன். பள்ளி மாணவர்களுக்கு தைரியத்தை கற்றுக் கொடுத்திருப்பேன் என பேசினார் . திருமுல்லைவாயில் போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் சிசிடிவி காட்சிகளை அலசி ஆராய்ந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்..