கோவை டாஸ்மாக் கடை அருகே தனியார் நிறுவன ஊழியருக்கு பீர் பாட்டில் குத்து-பணம் கொள்ளை..!

கோவை அருகே உள்ள கணபதி நேதாஜி நகரை சேர்ந்தவர் விமல் (வயது 30) அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று சின்ன வேடம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது அருந்த சென்றார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டனர் .இவர் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து அவரது சட்டைப் பையில் இருந்த 1500 ரூபாய், பேன் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அவரை பீர் பாட்டிலால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார்கள். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து விமல் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்கு பதிவு செய்து 4பேரை தேடி வருகிறார்..