ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து புஞ்சைபுளியம்பட்டி செல்லும் சாலையில் புளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் இரட்டை பாலம் அருகே சென்று கொண்டிருந்த ஈரோட்டை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிக்கு சொந்தமான பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கீழே இறங்கி நின்றது. இது குறித்த தகவல் அறிந்த புஞ்சைப் புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது நேற்று கல்லூரி விடுமுறை தினம் என்பதால் காலியாக இருந்த கல்லூரி பஸ்ஸை புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த ஓட்டுநர் நிர்மல் குமார்(24) மற்றும் அவருடைய சகோதரர் நிதிஷ் (24) இருவரும் மது அருந்திவிட்டு மதுபோதையில் கல்லூரி பஸ்ஸை இயக்கியதாகவும், நிதிஷ் பஸ்ஸை இயக்கியபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி மரத்தில் மோதி நின்றது தெரியவந்தது. விபத்து குறித்து புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
Leave a Reply